Saturday, March 29, 2008

அதிகாரிகளின் துணையோடு அரிசி கடத்தல்

சென்னை, மார்ச் 28: ரேஷன் கடைகளுக்கு வ ரு வ த ற் கு முன்பே, அதி க ô ரி க ளி ன் துணையோடு அரிசி கடத்தப் படுவதாக இந் திய கம்யூ னிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ராம சாமி குற்றம் சாட்டினார்.பேரவையில் வெள்ளிக்கிழமை இதுகுறித்து நடந்த விவாதம்:

ராமசாமி (கம்யூனிஸ்ட்):

ரேஷன் கடைகளுக்கு வருவதற்கு முன்பே, அதிகாரிகளின் துணை யோடு அரிசி கடத்தப்படுகிறது.ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசி வழங்கப் படுவதில்லை. 5 கிலோ பச்சரிசி, 5 கிலோ புழுங் கல் அரிசி என மொத்தம் 10 கிலோ அரிசிதான் வழங்கப்படுகி றது. கேரளம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கு வழங் கும் அரிசியின் அளவை மத்திய அரசு குறைத்து உள்ளது. அது போல தமிழகத்துக்கும் குறைக் கப்பட்டுள்ளதா?

அமைச்சர் எ.வ. வேலு:

தமிழ கத்துக்கு கிடைக்க வேண்டிய அரிசியை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாவட் டத்துக்கும் நுகர்வோர் வாங்கும் அளவைப் பொருத்து அரிசி விநி யோகிக்கப்படுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 93 சதவீதம் பேர் அரிசி வாங்குகின்றனர்.ஈரோடு, நாமக்கல், கோவை மாவட்டங்களில் 53 முதல் 63 சத வீதம் பேர் மட்டுமே அரிசி வாங் குகின்றனர்.

அதற்கு தகுந்தாற் போலதான் அரிசி விநியோகம் செய்யப்படுகிறது.கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் ஒட்டு மொத்தமாக அரிசியை இருப்பு வைக்க வசதி கள் இல்லை. அதனால் முதலில் 60 சதவீதமும், பிறகு 40 சதவீத மும் இருப்பு வைக்கப்படுகின் றன. முன்பு 20 கிலோ அரிசியை யும் ஒரே தவணையில் வாங்க கட்டாயப்படுத்துகிறார்கள் என்ற புகார் வந்தது.

அதனால் தான் மக்கள் விருப்பப்படி 5 கிலோ, 10 கிலோ வழங்க அரசு உத்தரவிட்டது. அரிசி கடத்த லில் ஈடுபடுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகி றது. அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு தொலைபேசி எண்களும் தரப் பட்டுள்ளன.

கே.ஏ. செங்கோட்டையன் (அதிமுக):

அரிசி கடத்துபவர் கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றீர்கள். இதுவரை குண்டர் சட்டத்தில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?

எ.வ. வேலு:

இதுவரை ஐந்து பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருசிலர் 1984-ல் இருந்து அரசை ஏமாற்றி அரிசி கடத்தி வருகின்றனர்.கடந்த ஆறு ஆண்டுகளாக அரி சிக் கடத்தலில் ஈடுபட்டு வந்த 13 பேர் அடையாளம் காணப்பட்டு அதில் எட்டு பேர் கைது செய் யப்பட்டுள்ளனர்.

ராமசாமி:

இந்தப் பிரச்னை யைச் சமாளிக்க மாதந்தோறும் நுகர்வோர் குறை தீர்க்கும் நாளை அரசு நடத்த வேண்டும்.

No comments: