Saturday, March 29, 2008

திருமணம் ஆகாதவர்களுக்கு உதவித் தொகை தாருங்கள்

சென்னை, மார்ச் 26 : திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ. கோ.அரி கோரிக்கை விடுத்தார்.சட்டப் பேரவையில் புதன்கி ழமை நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும் சமுதாயத்தில் அநாதை கள் போல உள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும்.நிலைக்கண்ணாடி: என்னதான் சீவி சிங்காரத்து அலங்காரம் செய்தா லும் அதைப் பார்ப்பதற்கு நிலைக் கண்ணாடி வேண்டும். அதுபோல இந்த ஆட்சியை ஒப்பிட்டு பார்க்க வேண்டிய நிலைக்கண்ணாடி அதி முக ஆட்சியாகும்.

அதிமுக ஆட்சியில் மழை நீரைச் சேகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. அதனால் நிலத்தடி நீர் அளவு உயர்ந்துள்ளது என்று அறி ஞர்கள் பாராட்டியுள்ளனர்.இந்த நிதிநிலை அறிக்கையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த எந் தத் திட்டமும் இல்லை. அதிமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு என் பதே இல்லை.

இப்போது தொழிற் சாலைகளுக்கு விடுமுறை விடக்கூ டிய அளவுக்கு மின் தட்டுப்பாடு உள்ளது.நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மாவட்ட, நகராட்சி, ஊராட்சி மருத்துமனைகளில் அவசர விபத்து சிகிச்சைப் பிரிவைத் தொடங்க வேண்டும் என்றார் அரி.

No comments: