Saturday, March 29, 2008

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தை இரண்டாகப் பிரிக்க அரசு பரிசீலனை

சென்னை, மார்ச் 28: சென்னை மாநகர போக்குவரத்துக் கழ கத்தை இரண்டாகப் பிரிக்க அரசு பரிசீலனை செய்து வருவ தாக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரி வித்தார்.பேரவையில் வெள்ளிக்கி ழமை, கேள்வி நேரத்தில் இதை அவர் அறிவித்தார்.

மு.அப்பாவு (திமுக):

திரு நெல்வேலி மாவட்டம் திசை யன் விளையிலிருந்து மன்னார்பு ரம் விலக்கு, தெ. கள்ளிகுளம் வழியாகவும், ஆற்றங்கரை பள் ளிவாசல் வழியாகவும் சென் னைக்கு அரசு விரைவுப் பேருந்து விட வேண்டும்.திருநெல்வேலியைத் தலைமை யிடமாகக் கொண்டு புதிய போக்குவரத்துக்கழகம் அமைக் கப்பட வேண்டும்.

கே.என். நேரு

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 17,500 பஸ் கள் ஓடின. இப்போது 19,500 பஸ்கள் ஓடுகின்றன.நிர்வாக வசதிக்காக 20 போக் குவரத்துக் கழகங்கள் 7 ஆக குறைக்கப்பட்டன. தற்போது 2,000 பஸ்களுக்கு ஒரு போக்குவ ரத்துக் கழகம் தொடங்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.மதுரை மண்டலத்தில் 3,900 பஸ்களும், சென்னை மண்டலத் தில் 3,100 பஸ்களும் ஒடுகின் றன. சென்னை மண்டலத்தை வடசென்னை, தென்சென்னை என்று பிரிக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகி றோம்.
மதுரை மண்டலத்தை யும் பிரிப்பது பற்றி ஆலோசிக் கப்படும்.

எம்.ஆர். சுந்தரம் (காங்):

ஆத் தூரில் இருந்து சென்னைக்கும், திருப்பதிக்கும் ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.கே.என். நேரு: அரசு விரை வுப் போக்குவரத்துக் கழகத் துக்கு 100 ஏ.சி. பஸ்கள் வாங்கப் பட்டுள்ளன.அவை, இப்போதுதான் வந்து கொண்டிருக்கின்றன. அவை வந்ததும் ஆத்தூரில் இருந்து சென்னைக்கும், திருப்பதிக்கும் விடுவது பற்றி முடிவு செய்யப்ப டும்.

கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):

சாதாரண கட்டண பஸ்களை நிறுத்திவிட்டு எல்.எஸ்.எஸ்., ஏ.சி. பஸ்களை இயக்கி வருவ தாக எங்களுக்கு செய்திகள் வரு கிறது.

கே.என். நேரு:

சாதாரணக் கட்டணத்தில் இயக்கப்படும் பஸ்களை எங்கும் நிறுத்த வில்லை. புதிய வழித்தடங்களில் தான் எல்.எஸ்.எஸ்., ஏ.சி. பஸ் கள் இயக்கப்படுகின்றன.சென்னை மாநகரில் ஒடும் 3,100 பஸ்களில் 2,100 பஸ்கள் சாதாரணக் கட்டணத்தில் ஒடிக் கொண்டிருக்கின்றன.

No comments: