Saturday, March 29, 2008

மதுவிலக்கு: திமுக - பாமக காரசார விவாதம்

சென்னை, மார்ச் 26 : மதுவி லக்கை அமல்படுத்துவது தொடர்பாக பேரவையில் பாமக உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற் றது.சட்டப் பேரவையில் புதன்கி ழமை நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பாமக உறுப்பினர் "எதிரொலி' மணியன் பேசினார். அப்போது, இந்த விவாதம் இடம் பெற்றது.

எதிரொலி மணியன்:

பிரிட்ட னில் ஆளும் கட்சிக்கு உதவும் வகையில் எதிர்க் கட்சியினர் நிழல் பட்ஜெட்டை வெளியிடு கிறார்கள். அதுபோல இந்தியா வில் அரசுக்கு உதவுவதற்காக நிழல் பட்ஜெட்டை பாமக வெளியிட்டு வருகிறது. பாமக நிதிநிலை அறிக்கையில் கூறப் பட்டிருந்த பல திட்டங்கள் பட் ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள் ளன. அதற்காக அரசுக்கு நன்றி.

வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கொடுத்ததோ இல் லையோ, வீட்டுக்கு ஒரு குடிகா ரர்களை உருவாக்கி வருகிறது."டாஸ்மாக்' மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் தண்ணீ ரால் வரும் வருமானம் அல்ல.தாய்மார்களின் கண்ணீர் மூலம் கிடைக்கும் வருமானம்.மது மூலம் கிடைக்கும் வருமா னம் "குஷ்டரோகி கையினால் கொண்டு வரும் வெண்ணெய் போன்றது' என்று அண்ணா கூறியுள்ளார். அண்ணாவின் நூற்றாண்டு விழா நேரத்திலா வது மதுவைத் தடை செய்ய கூடாதா? திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகம் முழுவதும் 8,000 மதுக் கடைகளை திறந்துள்ளனர்.

பேரவைத் துணைத் தலை வர் வி.பி. துரைசாமி:

இரண்டு பேரையும் (திமுக, அதிமுக) ஒரே நேரத்தில் பகைத்துக் கொண் டால் எங்கே போவீர்கள்?

அமைச்சர் எ.வ. வேலு:

தமிழ கத்தின் அண்டை மாநிலங்க ளான கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி மாநிலங்களில் மதுவி லக்கு இல்லை. தமிழகத்தில் மட் டும் மதுவிலக்கைக் கொண்டு வந்தால் தமிழர்களின் வருமா னம் அண்டை மாநிலங்களுக் குச் சென்று விடும்."

எதிரொலி' மணியன்:

மகா ராஷ்டிரத்தில் மதுவைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அதன் விவரங் களை ராமதாஸ் முதல்வரிடம் நேரில் அளித்துள்ளார்.

மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:

தமிழகத் தில் மட்டும் மதுவிலக்கைக் கொண்டு வர முடியாது. இந் தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் தமிழ கத்திலும் அது நடைமுறைப்ப டுத்தப்படும்.

வேல்முருகன் (பாமக):

தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக பல திட்டங் களைச் செயல்படுத்தி வருகிறது.அதுபோல மதுவிலக்கை அமல் படுத்தி மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக இருக்க லாம்.

ஆர்க்காடு வீராசாமி:

மதுவி லக்கை அமல்படுத்தினால் தமிழ கத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும். சாதாரண மக்கள் பலர் சிறையில் இருக்க நேரிடும்.

வேல்முருகன்:

அரசு காவல் துறையை முடுக்கிவிட்டு கடும் நடவடிக்கை எடுத்தால் கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழித்து விடலாம். டாஸ்மாக்கில் வரு மானத்தை எப்படி பெருக்கலாம் என்று திட்டமிடும் அரசால் கள் ளச் சாராயத்தை ஒழிக்க முடி யாதா?

ஆர்க்காடு வீராசாமி:

மதுக்க டைகள் இருப்பதால்தான் கள் ளச் சாராயம் இல்லை. பாமகவி னர் மத்திய அமைச்சர் அன்பு மணி மூலமாக மத்திய அரசிடம் சொல்லி இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்யலாம்.

No comments: