Saturday, March 29, 2008

வெள்ள நிவாரணம் - ஹெக்டேருக்கு ரூ. 7,500 ஆக உயர்வு

ஹெக்டேருக்கு ரூ. 7,500 ஆக உயர்வு சென்னை, மார்ச் 26 : மழை வெள்ளத்தால் சேதமான நெல் பயிருக்கான நஷ்டஈடு ஹெக்டேருக்கு ரூ. 7,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், சட் டப் பேரவையில் அறிவித்தார்.

மார்ச் 21-ம் தேதி முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கூட்டத்தில் நெல் பயிர் பாதிப்புக்கு ஹெக்டேருக்கு ரூ. 4,000 வழங்கப்ப டும் என்று அறிவிக்கப்பட்டது.மழை, வெள்ளச்சேதம் குறித்து சட்டப் பேரவை யில் புதன்கிழமை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் அதிமுக, காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தே.மு.தி.க. ஆகிய கட்சிகளின் சார்பில் தலா ஒருவர் பேசினர்.இறுதியில் விவாதத்துக்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மழை வெள்ளத்தால் சேதமடைந்த நெல் பயிருக்கு, ஹெக்டேருக்கு (ஒரு ஹெக்டேர் என்பது இரண்டரை ஏக்கர்) ரூ. 7,500 வழங்கப்படும். அதிகபட்சமாக இரண்டு ஹெக்டேருக்குத்தான் நிவாரணம் வழங்கப்ப டும் என்ற விதி மாற்றப்பட்டு, சேதமடைந்த நிலங்கள் அனைத்துக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும்.மழையை நம்பியிருக்கும் பகுதிகளில் பயிரிடப் பட்ட பயிர்களின் சேதம் 50 சதவீதத்துக்கு மேல் இருந்தால் ஹெக்டேருக்கு ரூ. 2,000 வழங்கப்படும்.பாசன வசதி உள்ள இடங்களில் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 4 ஆயிரமும், நிரந்தர பயிர்களான மா, புளி போன்ற பயிர்களுக்கு ஹெக் டேருக்கு ரூ. 6,000 வீதமும் இழப்பீடு வழங்கப்படும்.

ரூ. 100 கோடி ஒதுக்கீடு:

மார்ச் 21-ம் தேதி நடந்த கூட்டத்தில் வெள்ள நிவாரணத்துக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு அறி விக்கப்பட்ட தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.2 ஆயிரமும், 5 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண் ணெண்ணெய், ஒரு வேட்டி, ஒரு சேலை வழங்கப் பட்டு வருகின்றன.முழுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. ஆயிரம் பாத்திரங்கள் வாங்கவும், உடைகள் வாங்க ரூ. ஆயிரமும் வழங்கப்படும்.

மாடு இறந்தால் ரூ. 10,000:

மழையினால் இறந்த பசு, காளை, எருமை மாடுகளுக்கு ரூ. 10 ஆயிரமும், கன்றுகளுக்கு ரூ. 5 ஆயிரமும், ஆடு, செம்மறி ஆடுகளுக்கு ரூ. 1000 நிவாரணம் வழங் கப்படும்.குடும்பத்துக்கு ஒரு கறவை மாடு அல்லது நான்கு சிறிய கறவை இனங்களுக்கும், பாரம் சுமக்கும் விலங்குகளில் ஒரு பெரிய இனம் அல் லது இரண்டு சிறிய இனங் களுக்கு மட்டுமே தற் போது நிவாரணம் வழங் கப்படுகிறது.இந்த எண்ணிக்கை வரம்பு நீக்கப்பட்டு இறந்த அனைத்து கால்நடைகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும். என்றார் மு.க.ஸ்டாலின்.

No comments: