சென்னை, மார்ச் 28: முந்திரி சாப்பிடுவது நல்லதா இல்லையா என்பது குறித்து சட்டப் பேரவை யில் ருசிகர விவாதம் நடைபெற் றது.பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது இது குறித்து நடந்த விவாதம்:
க. ராஜேந்திரன் (அதிமுக):
ஜெயங்கொண்டம் பகுதியில் முந் திரி விளைச்சல் அதிகமாக உள் ளது. எனவே அங்கு முந்திரி தொழிற்சாலையை அரசு அமைக்க வேண்டும்.
அமைச்சர் பொங்கலூர் பழ னிச்சாமி:
ஜெயங்கொண்டம் பகு தியில் முந்திரி தொழிற்சாலை அமைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. ஆனால் தனியார் தொழில் முனைவோர்கள் முந்திரி ஆலை தொடங்க முன்வந்தால் அவர்களுக்கு அனைத்து ஆலோச னைகளையும் மாவட்ட தொழிற் பயிற்சி மையம் அளிக்கும்.
வேல்முருகன் (பாமக):
முந்திரி அதிகமாக விலையும் பண்ருட்டி யில் முந்திரி ஆலை அமைக்கப்ப டும் அரசு ஏற்கனவே உறுதியளித் தது. முந்திரி பழத்திலிருந்து ஒயின் தயாரித்து மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
பொங்கலூர் பழனிச்சாமி:
முந்திரியிலிருந்து ஓயின் தயாரித்து மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்று வேல்முருகன் சொல்வது அவரது கட்சியின் கொள்கைக்கு எதிராக உள்ளது.
டி. ஜெயக்குமார் (அதிமுக):
ஒரு நாளைக்கு 10 முந்திரி சாப்பிட் டால் ஹெச்.டி.எல். என்ற நல்ல கொழுப்பு உற்பத்தியாகி, எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பு குறையும் என்று சமீபத் திய ஆய்வு கூறுகிறது.முந்திரி சாப்பிட்டால் மலட்டுத் தன்மை ஏற்படாது என்றும் ஆராய்ச்சியில் கண்டு பிடித்திருக் கிறார்கள். மலட்டுத் தன்மை இல் லாத நிலையை ஏற்படுத்த தமிழ கம் முழுவதும் முந்திரி பயிரிட அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும்.
ஆர்க்காடு வீராசாமி:
முந்திரி சாப்பிட்டால் நிச்சயமாக கொழுப்பு ஏற்படும். கொழுப்பு அதிகமானால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். அதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே ஜெயக்குமார் மட்டுமல்ல அனைத்து உறுப்பினர்களும் முந் திரி சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது என்றார்.
Saturday, March 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment