சென்னை, மார்ச் 26 : தமிழகத்தில் கோயில் சொத்துகள் கொள்ளை போவதாக சட்டப்பேரவை காங்கி ரஸ் கட்சி துணைத் தலை வர் டி. யசோதா குற்றம் சாட்டினார்.நிதிநிலை அறிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற பொது விவாதத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள கோயில்களின் சொத்துகள் கொள்ளை போகின்றன.குறிப்பாக, எனது தொகுதியான ஸ்ரீபெ ரும்புதூரில் நிலத்தின் மதிப்பு அதிகமாக இருப்பதால் கோயில் நிலங்கள் "பிளாட்' போட்டு விற்கப்பட்டு வருகின்றன. எனது தொகுதியில் உள்ள மணவாளம்பாக்கம் ராமர் கோயிலுக்குச் சொந்தமான 23 ஏக் கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு விட்டி ருக்கிறார்கள்.
தலித்துகளை அறங்காவலர்களாக நிய மிக்க வேண்டும்:
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீ ராமானுஜர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்தக் கோயில் அறங் காவலர் குழுவில் தலித்துகள் யாரும் இல்லை. ஆன்மிகத்தில் புரட்சி செய்த ராமானுஜர் கோயில் அறங்காவலர்களாக தலித்துகளை நியமனம் செய்ய வேண்டும்.அமைச்சர் பெரியகருப்பன்: இந்தக் கோயில் தொடர்பான வழக்கு நிலுவை யில் உள்ளது.
அழைப்பிதழில் பெயர் இல்லை:
எனது தொகுதியில் நீதிமன்றத் திறப்பு விழா நடைபெற்றது. ஆனால் அதற்கான அழைப்பிதழிலும், கல்வெட்டிலும் எனது பெயர் இல்லை.
அமைச்சர் துரைமுருகன்:
நீதிமன்றம் வேண்டும் என்று எம்.எல்.ஏக்கள்தான் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் நீதி மன்ற திறப்பு விழாவுக்கு எம்.எல்.ஏ-களை அழைப்பதில்லை. நீதிமன்ற திறப்பு விழாக்களை அரசு நடத்துவதில்லை.
எனது சொந்த ஊரான குடியாத்தத்தில் நடந்த நீதிமன்றத் திறப்பு விழாவுக்கு எனக்கே அழைப்பு இல்லை.இது குறித்து நான் பலமுறை சம்பந்தப்பட் டவர்களிடம் எடுத்துக் கூறி விட் டேன். ஆனால், நீதிமன்றத்தில் உள்ள சிலர் பிடிவாதமாக இருக்கிறார்கள். உறுப் பினர் யசோதாவின் கருத்தை நானும் ஆத ரிக்கிறேன்.
Saturday, March 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment