சென்னை, ஏப். 16: 2007-2008-ம் ஆண்டில் மொத்த மென்பொருள் ஏற்றுமதி ரூ.26,000 கோடியாக உயரும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். பேரவையில் புதன்கிழமை, கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து நடைபெற்ற விவாதம்:
ரங்கநாதன் (திமுக):
2007-2008-ம் ஆண்டில் மென்பொருள் ஏற்றுமதி, வர்த்தகம் மூலமாக தமிழக அரசுக்கு எவ்வளவு வருமானம் வந்துள்ளது?
முதல்வர் கருணாநிதி:
2005-2006-ம் ஆண்டில் ரூ. 14,400 கோடிக்கும், 2006-2007-ம் ஆண்டில் ரூ. 21,700 கோடிக்கும் மென்பொருள் ஏற்றுமதி நடந்தது. 2007-2008-ம் ஆண்டு மென்பொருள் ஏற்றுமதி ரூ. 26,000 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி. செங்குட்டுவன் (திமுக):
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக ல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா?
முதல்வர் கருணாநிதி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வட்டம் விசுவநாதபுரம் கிராமத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க 172.19 ஏக்கர் நிலம், "எல்காட்' நிறுவனத்துக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அரசு உத்தேசித்துள்ளது. அதற்காக எல்காட் நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள் ளது. இங்கு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க, எல்காட் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
டி. செங்குட்டுவன்:
கடந்த பிப் ரவரி 26-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட புதிய ஆட்சித் தலைவர் அலுவலகத் திறப்பு விழாவில், ஓசூர் விசுவநாதபுரத்தில் சுமார் 200 ஏக்கர் நிலத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.சுமார் 200 ஏக்கர் நிலம் அரசிடம் இருப்பதால் அந்த இடத்தில் மேலும் ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க அரசு முன்வருமா?
முதல்வர் கருணைநிதி:
இப் போது ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளேன். செங்குட்டுவன் இன்னொரு பூங்காவுக்கு ஆசைப்படுகிறார். அது பற்றி பிறகு பரிசீலிக்கப்படும்.
டாக்டர் காயத்ரிதேவி (காங்கிரஸ்):
சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அதிகரித்து வருவ தால் மக்களின் பழக்க வழக்கங்கள் மாறிக் கொண்டு வருகின்றன. வீட்டு வாடகை அதிகரித்து வருகிறது. ஏழைகள் சென்னை போன்ற நகரங்களில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை இரண்டாம், மூன்றாம் நிலை நகராட்சிகளின் அருகில் அமைக்க அரசு முன்வருமா?
முதல்வர் கருணாநிதி:
இது தொழில் வளர்ச்சிக்கு உரிய கேள்வி அல்ல. பரிசீலனைக்கு உரிய கேள்வி.
No comments:
Post a Comment