சென்னை, ஏப். 17: ஓட்டல்களில் மிக அதிகமான விலைக்கு தோசை விற்கப்படுவதாக சட்டப்பேரவையில் அதிமுகவினர் புகார் கூறினர். பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் விலைவாசி உயர்வு குறித்து அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி கள் பிரச்னையை கிளப்பின. அப்போது நடந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், "இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்கிறீர்கள். ஆனால் ஒரு தோசை ரூ. 12 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது' என்று குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் பரிதி இளம் வழுதி, "ஒரு கிலோ அரிசியில் ஆயிரக்கணக்கான தோசை சுடலாம்' என்றார். உடனே அதிமுக எம்.எல்.ஏக்கள் தோசைக்கான ஓட்டல் "பில்'லை உயர்த்திக் காட்டினார்கள். தோசை விலை ரூ. 12 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது என்பதை மீண்டும் வலியுறுத்தினார் ஓ.பன்னீர்செல்வம்.
அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப் பன் அது ஸ்டார் ஓட்டலில் உள்ள விலையாக இருக்கும் என்றார். தோசை பற்றிய இந்த விவாதத்தினால் பேரவை கலகலப்பாக இருந் தது.
No comments:
Post a Comment