சென்னை, ஏப். 16: சுடுகாட்டுப் பிரச்னையால்தான் பெரும்பாலும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படு வதாக விடுதலைச் சிறுத் தைகள் எம்.எல்.ஏ. செல்வம் தெரி வித்தார். பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
கிராமங்களில் சுடுகாட்டுப் பிரச்னையால்தான் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. பல இடங்களில் சுடுகாட்டுப்பாதை ஆதிக்க வர்க்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பிரச்னைக்கு அரசு தீர்வு காண வேண்டும். திருநெல்வேலி, நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு பயிற்சி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு தங்கும் விடுதிகளை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும்.
அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் சுழல்நிதி வழங்க வேண்டும். குஜராத் மாநிலத்தில் சூரியஒளி மூலம் இயங்கும் மின் தகன மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல தமிழகத்திலும் அமைக்க வேண்டும். அனைத்துப் பேரூராட்சி பகுதிகளிலும் மின்தகன மேடைகள் அமைக்க வேண்டும் என்றார் செல்வம்.
Thursday, April 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment