சுவர் மீது மின்சாரம்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் சென்னை, ஏப். 17: மதுரை மாவட்டம் எழுமலை என்ற ஊருக்கு அருகில் உள்ள உத்தபுரம் கிராமத்தில் தீண்டாமையின் அடையாளமாக உள்ள தடுப்புச் சுவர் மீது மின்சாரம் பாய்ச்சப்படுவதாக "தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி' குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து அதன் மாநில அமைப் பாளர் பி. சம்பத் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு இந்தப் பிரச்னையில் உடனடியாக தலையிட்டு உத்தபுரம் தடுப்புச் சுவர் மீது இரும்புக் கம்பிகளைப் பொருத்தி மின்சாரம் பாய்ச்சுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தீண்டாமையின் அடையாளமாக உள்ள அந்தச் சுவரையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment