சென்னை, ஏப். 16: தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி. சண்முகம் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளின் தொலைபேசியை உளவுத்துறை ஒட்டுக் கேட்டதாக செய்திகள் வெளிவந்தன. அதிமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) இந்தப் பிரச்னையை பேரவையில் எழுப்பின.
இது குறித்து பேரவையில் நடந்த விவாதத்துக்கு பதில் அளித்த முதல்வர், "தொலைபேசி ஒட்டுக் கேட்டது பற்றி விசாரிக்க ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என்று அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை அமைத்துள்ளது.
இந்த கமிஷன் மூன்று மாதத்துக்குள் விசாரணை நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment