பேரவையிலிருந்து அதிமுக இரண்டாவது நாளாக புதன்கிழமை வெளிநடப்பு செய்தது.அரசு உயரதிகாரிகளின் தொலைபேசியை உளவுத் துறை ஒட்டுக் கேட்டதாக பத்திரிகைகளில் வெளியான செய்தியை அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் செவ்வாய்க்கிழமை பேரவையில் கிளப்பின. இந்தப் பிரச்னை தொடர்பாக, அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
முதல்வர் கருணாநிதி பேசும்போது இடையூறு செய்ததாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோ. அரி, வி.பி. கலைராஜன் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில், பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் அ.தி.மு.க. கொறடா கே.ஏ. செங்கோட்டையன் எழுந்து, சி.டியை உயர்த்திக் காட்டி தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து பேச முற்பட்டார்.
இதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர் ""இந்தப் பிரச்னைக்கு முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமையே பதிலளித்து விட்டார். ஆதாரம் இருந்தால் அதனை விசாரணை கமிஷ னிடம் கொடுங்கள்'' என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். சற்று நேரத்தில் அவர்கள் பேரவைக்கு மீண்டும் திரும்பி வந்தனர்.
No comments:
Post a Comment