சென்னை, ஏப். 16: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுக்காக தில்லி செல்லும் மாணவர்களுக்கு, தில்லி தமிழ்நாடு இல்லத்தில் சலுகை கட்டணத்தில் தங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
சலுகை கட்டணத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 மாணவர்கள் தங்கி வருகின்ற னர். இந்த ஆண்டு தமிழ்நாடு இல்லத்தில் 17 பெண்கள் உள் பட 91 பேர் தங்கியுள்ளனர். நேர்முகத் தேர்வை எதிர் கொள்ள முன்னாள் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களைக் கொண்டு ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு இல்லத்தில் இந்த ஆண்டு மேலும் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment