சென்னை, ஏப். 17: அம்பத்தூர் தாலுகாவை பிரிப்பது குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாக வருவாய்த் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:
டி. சுதர்சனம் (காங்கிரஸ்):
அம்பத்தூர் தாலுகாவில் 15 லட்சம் வாக்காளர் உள்ளனர். இந்தத் தாலுகாவில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் தாசில்தாரை எப்போது சென்றாலும் பார்க்க முடிவதில்லை. எனவே அம்பத்தூர் தாலுகாவை, அம்பத்தூர், திருவொற்றியூர், மாதவரம் என்று மூன்றாக பிரிக்க வேண்டும்.
அமைச்சர் ஐ. பெரியசாமி:
அம்பத்தூர் தாலுகாவை பிரிப்பது அரசின் ஆய்வில் உள்ளது. தாம்பரம் தாலுகாவில் 18 லட்சம் மக்கள் தொகை உள்ளது. ஒரு தாலுகாவில் ஒன்று முதல் 5 லட்சம் வரைதான் மக்கள் தொகை இருக்கலாம். மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த பெருநகரங்கள், மலைப் பகுதிகளை சிறப்பு நிகழ்வாகக் கருதி அங்கு தாலுகாவைப் பிரிப்பது குறித்து அரசு பரிசீலிக்கும்.
வை. சிவபுண்ணியம் (கம்யூ னிஸ்ட்):
ஒரு நாடாளுமன்ற தொகு திக்கு ஒரு மாவட்டம் அமைக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தபோது அதுபற்றி பரிசீலிக் கப்படும் என்று முதல்வர் கருணா நிதி கூறினார். அந்தத் திட்டம் எந்த நிலையில் உள்ளது?
ஐ. பெரியசாமி:
ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. அது பற்றி முதல்வர் முடிவு செய்வார்.
ஜி.கே. மணி (பாமக):
சென்னை மாநகராட்சியை இரண்டாகப் பிரிப்பதற்கு அரசு ஆவன செய் யுமா?
ஐ. பெரியசாமி:
கடந்த 2 ஆண்டுகளில் 2 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியை இரண்டாகப் பிரிப்பது குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர்தான் முடிவு செய்யவேண்டும்.
No comments:
Post a Comment