சென்னை, ஏப். 16: அரசின் திட்டங்களை நிறைவேற்ற, நிர்ணயித்த தொகையைவிட அதிகத் தொகையை கேட்டு ஒப்பந்ததாரர்கள் அரசை நிர்ப்பந்தம் செய்வதாக பாமக எம்.எல்.ஏ வேல்முருகன் குற்றம் சாட்டினார். பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாடசித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
அரசு மிகப்பெரிய திட்டங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரும்போது வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் தான் பணிகளை எடுக்கின்றனர். அவர்கள் தங்களுக்குள் ஒரு தனிக் குழுவை ஏற்ப டுத்திக் கொண்டு அரசு நிர்ணயித்த தொகையைவிட அதிகத் தொகை கேட்டு அரசை நிர்பந்தம் செய்து வருகின்றனர். அரசும் திட்டங்கள் எல்லாம் வெறும் அறிவிப்போடு நின்று விட்டது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்பதற்காக ஒப்பந்ததாரர்க ளின் கோரிக்கைக்கு கட்டுப்பட வேண்டியுள்ளது. இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒரு மாற்றுத் திட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அதனை அரசு செயல் படுத்த வேண்டும். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தயாரித்துள்ள இரண்டாவது முழுமைத் திட்டத்தில் குறைபாடுகள் அதிகமாக உள்ளன. மக்கள் பிரதிநிதிகள், வல்லுநர்களிடம் கருத்து கேட்டு இரண்டாவது முழுமைத் திட்டத்தை வெளியிட வேண்டும்.
அமைச்சர் பரிதி இளம் வழுதி:
ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்களிடம் கலந்தாய்வு கூட்டங்கள் மூலம் கருத்துக் கேட்ட பிறகே இரண்டாவது முழுமைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வுக் கூட்டங்களில் பாமக பிர முகர்களும் கலந்து கொண்டனர்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இரண்டாவது முழுமைத் திட்டத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தயாரித்துள்ளது. எனவே தயவு செய்து அதனை வரவிடுங்கள். சுய உதவிக் குழுக்கள் எல்லாம் கந்து வட்டி குழுக்களாக மாறி வருகின்றன. இதனை அரசு தடுக்க வேண்டும் என்றார் வேல்முருகன்.
No comments:
Post a Comment