சென்னை, ஏப். 17: விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுகவினர் நடத்திய வெளிநடப்பு, அறப் போராட்டமா? அரைப் போராட்டமா? என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது.
பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. வெளிநடப்பு செய்த சில நிமிஷங்களில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அவைக்குத் திரும்பினார்கள். அப்போது விலைவாசி உயர்வு குறித்து முதல்வர் கருணாநிதி பேசிக் கொண்டிருந்தார். அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் அவைக்கு வருவதைக் கவனித்த முதல்வர், "அரைப் போராட்டம் என்ற காரணத்தால்தான் வெளியே சென்றவர்கள் திரும்பி வந்து விட்டார்கள்' என்றார்.
முதல்வர் தனது பேச்சை முடித்ததும் அதிமுக கொறடா கே.ஏ. செங்கோட்டையன் எழுந்து, "முதல்வர் எங்களின் அறப் போராட்டத்தை அரைப் போராட்டம் என்று கூறினார். அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். விலைவாசி உயர்வு பிரச்னையில் எங்களின் எதிர்ப்பைக் காட்டவே வெளிநடப்பு செய்தோம். இப்போது ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்க வந்துள்ளோம்' என்றார்.
No comments:
Post a Comment