சென்னை, ஏப். 16: சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சென்னையில் புதிதாக ஐந்து சுற்றுலா பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். இதுகுறித்து பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதம்:
விடியல் சேகர் (காங்கிரஸ்):
சென்னை மாநகரில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பார்க்க வசதி யாக சுற்றுலாத் துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதுபோல சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வரை சுற்றுலா பஸ்களை இயக்கினால் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும். இதுபோன்ற திட்டம் அரசிடம் உள்ளதா?
கே.என். நேரு:
கோவை போக் குவரத்து கழகத்தின் சார்பில் ஊட்டியில், முழுவதும் கண்ணாடி இழைகளால் வடிவமைக்கப் பட்ட சுற்றுலா பஸ் இயக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகளைக் கவர புதிதாக ஐந்து சுற்றுலா பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.
சி. துரைராஜ் (அதிமுக):
தேனி மாவட்டம் வருசநாடு மயிலாடும் பாறையிலிருந்து மதுரை மாவட்டம் மள்ளப்புரம், ஏழுமலை வழியாக உசிலம்பட்டிக்கு மலைச் சாலையில் பஸ்கள் இயக்கப்படுமா? இந்த சாலையில் கடந்த ஆட்சியில் சோதனை ஒட்டமாக பஸ் இயக்கப்பட்டது. ஆனால் சாலைகள் குறுகலாக இருப்பதால் பெரிய பஸ்கள் இயக்க முடியவில்லை. எனவே அந்த மலைப் பகுதிகளுக்கு ஏற்றாற்போல், சிறிய பஸ்களை இயக்க அரசு முன் வருமா?
கே.என். நேரு:
அப்பகுதிக்கு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு நடத்தி, அதன் அடிப்படையில் அங்கு சிறிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment