சென்னை, ஏப். 23: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தின் நேரடி கொள்முதல் நிலையங் களில் தாற்காலிகமாக பணியாற்றி வந்த 144 பேர் பணி மூப்பு அடிப்படையில், பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணி நிரந்தர ஆணையை முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வழங்கினார்.
அதன் படி 144 பணியாளர்களுக்கும் கால முறை விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியின்போது, உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் கே.பனீந்திர ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.
Thursday, April 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment