Thursday, April 24, 2008

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு புறக்கணிப்பு ஏன்?

சென்னை, ஏப். 20: மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தயாரித்துள்ள வரைவு சாசனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தில்லியில் நடை பெறும் மாவட்ட, ஒன்றிய ஊராட்சித் தலைவர்களின் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஏப்ரல் 22 முதல் 24-ம் தேதி வரை தில்லியில் மாவட்ட, ஒன்றிய ஊராட்சித் தலைவர்களின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் சார் பில் பிரதிநிதிகளை அனுப்புமாறு முதல்வர் கருணாநிதிக்கு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர் அய்யர் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி தமிழகத்தி லிருந்து மாநாட்டில் கலந்து கொள்ள 68 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வரைவு சாசனம் ஒன்றை தயாரித்துள்ளது.

அதில், "ஊராட்சிகள்' என்ற பொருளை மத்திய பட்டியலுக்கு மாற்றுவது, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான மாநில அரசின் பொறுப்புகளை குறைப்பது போன்ற ஆட்சேபனைக்குரிய பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. தில்லியில் நடைபெறும் ஊராட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் இந்த வரைவு சாசனம் நிறைவேற்றப்பட்டு பிரதமரி டம் அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.

பிரதமருக்குக் கடிதம்:

இதுகுறித்து மார்ச் 29-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதிய முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாவது: பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தயாரித்துள்ள பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளுமாறு ஊராட்சித் தலைவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கூட்டாட்சி தத்துவத் துக்கு எதிராக இந்த வரைவு சாசனம் அமைந்துள்ளது. அதிகாரப் பரவலாக்கம் என்ற பெயரில் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தன்னை வலுப்படுத்திக் கொண்டு, மாநில அரசுகளை பலவீனப் படுத்த மேற்கொள்ளப்படும் இந்த முயற் சிகளை ஏற்க முடியாது.

ஆட்சேபத்துக்குரிய பரிந்துரைகளை வரைவு சாசனத்திலிருந்து நீக்கினால் மட்டுமே, தில்லி மாநாட்டில் கலந்து கொள்ள முடியும் என்று அந்தக் கடிதத் தில் கருணாநிதி கூறியிருந்தார். முதல்வரின் கடிதத்தில் உள்ளபடி ஆட்சேபனைக்குரிய பரிந்துரைகள் இன்னமும் நீக்கப்படவில்லை. எனவே தில்லி மாநாட்டில் கலந்து கொள்வ தில்லை என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது மேற்கு வங்க அரசும், மத்திய அரசின் வரைவு சாசனத்தை எதிர்த்து மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகா ரப் பரவலாக்கம் செய்வதிலும், கூடுதல் நிதி வழங்குவதிலும் இந்தியாவிலேயே தமிழக அரசு முன்னணியில் உள்ளது. 1996-ம் ஆண்டுக்குப் பிறகு மூன்று உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்ட்டு அவற்றின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் மற்றும் நிதி வழங்க வேண்டும் என்பதில் தமிழக அரசுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மாநில அரசு தனது அதிகாரங்களை விட்டுக் கொடுத்து தான் வழங்க வேண்டும் என்பதை தமிழக அரசு ஏற்கவில்லை என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

No comments: