சென்னை, ஏப். 23: சென்னை தரமணியில் ரூ. 1,500 கோடியில், தக வல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க முதல்வர் கருணாநிதி முன்னிû லயில் டி.எல்.எப். நிறுவனத்தடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. தமிழக அரசின் சார் பில் டிட்கோ நிறுவனத்தின் தலைவர் எஸ். ரôமசுந்தரமும் , டி.எல்.எப். நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் கே.பி. சிங்கும் இந்த ஒப்பந்தத்தில் புதன்கிழமை கையெழுத்திட்டனர்.
சென்னை தரமணியில் உள்ள ராஜீவ் காந்தி சாலை (பழைய மகாபலிபுரம் சாலை) தகவல் தொழில் நுட்ப மையமாகத் திகழ்கிறது. அங்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், (டிட்கோ) கட்டுமானத் தொழிலில் முன்னணியில் உள்ள டி.எல்.எப். நிறுவனத்துடன் இணைந்து தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கிறது.
சுமார் 26.64 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 1,500 கோடி மதிப்பீட்டில் இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் அமைய உள்ளது. 45 லட்சம் சதுர அடி பரப்பில் கட்டுமானப் பணிகள் அமைக்கப்பட உள்ளன. 2009-ம் ஆண்டு 25 லட்சம் சதுர அடி பரப்பில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும். மீதமுள்ள பணிகள் 2011- க்குள் முடிக்கப்படும். இதன் மூலம் 45 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரிடையாகவும், 10 ஆயிரம் இளைஞர்களுக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும்.
Thursday, April 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment