சென்னை, ஏப். 21: திருப்பூரில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் தெரிவித்தார். சட்டப் பேரவையில் திங்கள்கிமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:
செ.ம. வேலுசாமி (அதிமுக):
திருப்பூர், கோவை இரண்டு நகரங்களுக்கும் மையமாக உள்ள பல்லடத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க அரசு முன்வருமா? அதற்கு தேவையான நிலம் பல்லடத்தில் உள்ளது. கோவை மாநகராட்சி சி.வி. குடியிருப்பு பகுதியிலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய பகுதிகளில் எப்போது உள் விளையாட்டரங்கம் அமைக்கப்படும்?
அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான்:
இடவசதி, விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேவைக் கேற்ப விளையாட்டு கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. திருப்பூரில் உள் விளையாட்டரங்கம் அமைக்கும் திட்டம் அரசின் பரீசி லனையில் உள்ளது. பல்லடத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு ஆட்சியர் பரிந்துரைத்தால் நிதிநிலையை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கும். கோவையில் இடம் கிடைத்தால் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
Thursday, April 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment