மார்க்சிஸ்ட் சென்னை, ஏப். 23: மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலையை அவமதித்த மனநோயா ளிக்கு பின்னால் உள்ள வேறுசில நோயாளிகளையும் கண்டறிய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. நன்மாறன் அரசைக் கேட்டுக் கொண்டார்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலை, மர்ம நபர்களால் ஏப்ரல் 21-ம் தேதி அவமதிக் கப்பட்டது. இது குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதம்:
நன்மாறன் (மார்க்சிஸ்ட்):
மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலை மனநோயாளியால் அவமதிக்கப்பட்டது வேதனையைத் தருகிறது. இந்த மனநோயாளிக்குப் பின்னால் உள்ள வேறுசில நோயாளிகளையும் கண்டறிய வேண்டும். முத்துராமலிங்கத் தேவர் தியாக வாழ்வு வாழ்ந்த தேசியத் தலைவர். அவரை வைத்து தன் நலனை வளர்த்துக் கொள்ள யாரையும் அனுமதிக்கக் கூடாது.
துரைராஜ் (அதிமுக):
மதுரை யில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஒரு மனநோயாளியை கைது செய்திருப்பது போலீஸôர் திட்டமிட்டு நடத்திய நாடகம். உசிலம்பட்டியில் கடந்த இரண்டு நாட்களாக போக்குவ ரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. உயிரோடு இருக்கும் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத போது சிலைகளைப் பற்றி இந்த அரசு எங்கே கவலைப்படப் போகிறது? தேவர் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உ. மூர்த்தி (திமுக):
மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலையை கருணாநிதிதான் உருவாக்கினார். திமுக ஆட்சியில்தான் மூன்று கல்லூரிகள் அந்தப் பகுதியில் தொடங்கப்பட்டன. திமுக ஆட்சி யில்தான் தேவர் சமுதாயதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தேவர் சிலையை அவமதித்த மனநோயாளியை போலீஸôர் கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டு அமைதி நிலவுகிறது.
ராஜேந்திரன் (காங்கிரஸ்):
மதுரை கோரிப்பாளையத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதியால் உருவாக்கப்பட்ட தேவர் சிலையை அவமதித்த மனநோளி கைது செய்யப்பட்ட பிறகு அங்கு அமைதி நிலவுகிறது. இது தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக):
திமுக எம்.எல்.ஏ மூர்த்தியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேந்திரனும் தவறான தகவலைத் தந்துள்ளனர்.பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் மூக்கையா தேவர்தான் மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலையை உருவாக்கினார். கருணா நிதி தலைமையில் நடைபெற்ற விழாவில் அந்த சிலையை வி.வி.கிரி திறந்து வைத்தார்.
ஜி.கே. மணி (பாமக):
கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டது வேதனையைத் தரு கிறது. கைது செய்யப்பட்ட மன நோயாளிதான் உண்மையான குற் றவாளியா? அவருக்கு பின்னால் உள்ளவர்களையும் கண்டறிய வேண்டும்.
வீர இளவரசன் (மதிமுக):
வைத்தியநாத அய்யர் தலைமையில் தலித்துகள் மீனாட்சி அம்மன் கோயிலில் ஆலயப் பிரவேசம் செய்தபோது அதற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டவர் முத்துராமலிங்கத் தேவர். அவருக்கு இருந்த நிலங்களை எல்லாம் தலித் மக்களுக்கு தானமாக வழங்கியவர். அப்படிப்பட்ட தேவர் திருமகனாரின் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும். வேறு எந்த தலைவரின் சிலைக் கும் இதுபோன்ற அவமதிப்பு நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Thursday, April 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment