சென்னை, ஏப். 21: மாநில மகளிர் ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ பத்மாவதி கோரிக்கை விடுத்தார். தமிழக சட்டப்பேரவையில் திங் கள்கிழமை நடைபெற்ற சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
மாநில மகளிர் ஆணையத்தை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்ற வேண்டும். ஆணையத்தின் முடிவுகளை சட்டப் பேரவையில் விவாதிக்க வேண்டும். ஆண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து உடம்பில் சூடு போட்டு பிச்சை எடுக்கும் கும்பலை திருச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சத்துணவு மற்றும் அங்கன் வாடி பணியாளர்களுக்கு வார விடுமுறை, கோடை விடுமுறை அளிக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் ரூ.500-க்குக் குறையாமல் ஒய்வூதியம் வழங்க வேண்டும்.சத்துணவு தயாரிக்க ஒரு குழந் தைக்கு வழங்கப்படும் 44 பைசாவை அதிகப்படுத்தி ஒரு ரூபாய் வழங்க வேண்டும். ஊன முற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும்.
சக்தி கமலாம்பாள் (பாமக):
காஞ்சிபுரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை அவல நிலையில் உள்ளது. போதுமான டாக்டர்கள் இல்லை. மருந்துகள் இல்லை. இந்த மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை அரசு செய்துதர வேண்டும். முதியோர் உதவித் தொகையை விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க வேண்டும். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அரசு வழங்கும் நிதியை அதிகப்படுத்த வேண்டும்.
சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வாழைப்பழமும், மாம்பழமும் வழங்க வேண்டும். அண்ணா பிறந்த காஞ்சிபுரம் தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த வளர்ச்சித் திட்டமும் செயல் படுத்தப்படவில்லை. அண்ணா நூற்றாண்டு விழா ஆண்டான இந்த ஆண்டில் காஞ்சிபுரம் தொகுதியில் வளர்ச்சித் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். காஞ்சிபுரத்தில் புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்றார்.
Thursday, April 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment