சென்னை, ஏப். 23: மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். இது குறித்து சட்டப் பேரவையில் புதன்கிழமை கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் சிலை பைத்தியக்காரரால் அவமானப்படுத்தப் பட்டுள்ளது. இனி இதுபோன்ற வேதனையான சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அந்த சிலைக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். முத்துராமலிங்கத் தேவர் இன்று சிலை வடிவத்தில் இருந்தாலும் காமராஜரை உருவாக்கிய, தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட தலைவர். தேவருக்கும் காமராஜருக்கும் சில அரசியல் மாறுபாடுகள் இருந்தது. ஆனாலும் தேவர் மீது காமராஜர் கொண்ட அன்பும் பாசமும் எள்ளளவும் குறைந்தது இல்லை.
தேவர் மீது அண்ணா மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் ஏழை மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் அவர். எளிமைக்கும் தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவர்.
வீட்டுக்குள் இருந்தே ஓட்டு:
அவரது மறைவு தமிழகத்தை மட்டுமல்ல நாட்டையே உலுக் கியது. வீட்டுக்குள் இருந்து கொண்டு ஓட்டு வாங்கிய தலைவர் இந்தியாவில் அவர் மட்டுமே. அப்படிப்பட்ட தலைவரை இன்னும் சில காலம் பாதுகாக்க முடி யாமல் போனது, நமக்கு அவப்பேறு என்றுதான் சொல்ல வேண்டும். இன்று தேவர் சிலை இல்லாத இடங்கள் இல்லை என்கிற அளவுக்கு பல்லாயிரக்கணக்கான சிலைகள் உள்ளன.
சிலர் தேவரின் அருமை பெருமைகளை உணராமல் அவரது சிலையை உடைத்தும், அசிங்கப்படுத்தியும் வருகிறார்கள். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலையை பைத்தியக்காரர் ஒருவர் அசிங்கப்படுத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார் முதல்வர் கருணாநிதி.
Thursday, April 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment