சென்னை, ஏப். 21: சத்துணவு மையங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ லதா கோரிக்கை விடுத்தார். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள 41,663 சத்து ணவு மையங்களிலும் எரிவாயு இணைப்பு, புகைப்போக்கியுடன் கூடிய நவீன சமையல் கூடம் அமைக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் உள் ளிட்ட எல்லாத் துறைகளிலும் சரி பாதி பெண்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் பெண்களுக்கு சமூகப் பாதுகாப்பு இல்லை. மகளிர் ஆணையம் மூலமாக பெண்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். மகளிர் ஆணையத்துக்கு பெண் ணிய சிந்தனை உள்ளவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். ஆணையத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான் மையின பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். ஆண் வாரிசு உள்ள முதியோர்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும். பெண் சிசுக் கொலையைத் தடுக்க பெண்கள் தினத் தன்று கருத்தரங்குகளை அரசு நடத்த வேண்டும் என்றார்.
இளமதி சுப்பிரமணியம் (அதிமுக):
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.5,000 மாத ஊதியம் வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியின் தொலைநோக்கு திட்டமான தொட்டில் குழந்தைகள் திட்டத்துக்கு திமுக அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்றார்.
Thursday, April 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment