சென்னை, ஏப். 23: திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்த ஆம்புலன்ஸ்கள், டிரைவர்கள் இல்லாததால் ஓடவில்லை என்று அதிமுக எம்.எல்.ஏ. விஜயகுமார் குற்றம் சாட்டினார். பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் பல இடங்களில் டிரைவர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ்கள் செயல்படாமல் உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்களும் டிரைவர்கள் இல்லாததால் ஓடவில்லை. அரசு மருத்துவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படுவதைவிட மிகக் குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
அதுபோல அரசு மருத்துவர்களுக்கு 20 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் நாய்க்கடி மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அப்படியே இருந்தாலும் ரேஷன் கார்டு இருந்தால்தான் ஊசி போடுவேன் என்கிறார்கள்.
ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் குழந்தைகள் மாறியதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளை மாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுநீரகம் உள்ளிட்ட மனித உறுப்புகள் விற்பனையைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் விஜயகுமார்.
Thursday, April 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment