சென்னை, ஏப். 20: யாரையும் மிரட்டி வசூல் செய்கிற பழக்கம் எனக்கு வராது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். கேள்வி - பதில் வடிவில் ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
"ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்காக ரூ. 1,300 கோடியை ஏன் ஜப்பானிடம் வாங்க வேண்டும்? அரசியல் கட்சிகளுக்கு பணம் சப்ளை செய்வதற்காக இங்கே இரண்டு பேர் இருக்கிறார்கள். அரசியலுக்கு வந்த பிறகுதான் இதெல்லாம் எனக்குத் தெரியும்' என்று தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த் கூறியிருக்கிறார். அரசியலில் பல ஆண்டுகளாக இருக்கும் எனக்கு அந்த இரண்டு நபர் யாரென்று தெரியவில்லை. ஆனால் விஜயகாந்துக்கு தெரிந்திருக்கிறது. அப்படியே தெரிந்தாலும், யாரையும் மிரட்டி வசூல் செய்கிற பழக் கம் எனக்கு வராது. அரசியலுக்கு வந்த குறுகிய காலத்தில் இது போன்று பல விஷயங்கள் அவருக்கு தெரிந்திருக்கிறது.
ஒளிந்து கொள்வது எங்கே?
தமிழக உயர் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை புலனாய்வுத் துறை ஒட்டுக் கேட்டதாகக் கூறி, ஒரு சி.டி.யை அதிமுக எம்.எல்.ஏக்கள் பேரவையில் தூக்கிக் காட்டிய காட்சி புகைப்படமாக வந்திருக்கிறது. அவர்களின் அந்த மிரட்டலுக்கெல்லாம் யார் பயப்படுவார்கள்? அவர்கள் சி.டியை காட்டுவது இருக்கட்டும், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள் குறித்த அவர்களின் கையெழுத்தோடு கூடிய கோப்புகளை தூக்கிக் காட்டினால் எங்கே போய் ஒளிந்து கொள்வார்கள்?
சென்னை உயர் நீதிமன்றத்தின் மொழியாக தமிழைக் கொண்டுவர மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என்று மத்திய சட்ட அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் கூறியுள் ளார்.அவர் அளித்த உறுதி மொழியின் படி விரைவில் நல்ல அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று நம்புகிறேன்.
மரண தண்டனை...:
உலகளவில் மரண தண்டனையே கூடாது என்ப துதான் எனது கொள்கை. உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக வேண்டுகோள் விடுத்து, பாகிஸ்தானின் லாகூர் சிறையில் வாடும் இந்தி யரான சரப்ஜித் சிங்கின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.
சவால் விடுவதா?
தமிழ்நாடு, கர்நாடக மக்களின் உயிர், உடமைகளின் பாதுகாப்பைக் கருதி, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை ஒரு சில மாதங்களுக்கு ஒத்திவைத்ததற்காக போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று துள்ளிக் குதிக்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக இந்தத் திட்டம் கிடப்பில் இருந்த போது வாய்மூடி மெüனமாக இருந்தவர்கள் தி.மு.க. அரசு தானாக முன்வந்து, தூங்கிக் கொண்டிருந்த திட்டத்துக்கு புத்துயிர் கொடுத்து நிறைவேற்ற முன்வந்துள்ள நிலையில் சவால் விடுவது வேடிக்கையாக உள்ளது என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Thursday, April 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment