Friday, May 9, 2008

அமராவதி கால்வாயில் மே 10 முதல் 18 வரை தண்ணீர் திறக்க உத்தரவு

சென்னை, மே 5: அமராவதி பிரதான கால்வாயில் மே 10 முதல் 18-ம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் இது குறித்து அவர் தெரிவித்த விவரம்:

அமராவதி பிரதான கால் வாயில் ஆகஸ்டு 1 முதல் ஜன வரி 31 வரை தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் நான் கோவை சென்றிருந்தபோது ""கரும்பு காய்கிறது. தென்னைக்கு உயிர்த் தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே அமராவதி பிரதான கால்வாயில் உடனே தண்ணீர் திறக்க வேண்டும்'' என்று விவசாயிகள் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.

இது குறித்து முதல்வரிடம் தெரிவித்தபோது, அணையில் தண்ணீர் இருந்தால் தேவைப்படும்போது திறந்து விடலாம் என்றார். அதன்படி அமராவதி பிரதான கால்வாயில் மே 10 முதல் 18-ம் தேதி வரை தினமும் 440 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

No comments: