சென்னை, மே 5: நெசவாளர்களுக்கு எந்த அரசு நன்மை செய்தது என்பது தொடர்பாக அதிமுக -காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் இது குறித்து நடைபெற்ற விவாதம்:
கோ. அரி (அதிமுக):
பள்ளிப் பட்டு தொகுதியில் பட்டினிச் சாவு ஏற்படும் சூழ்நிலையில் விசைத்தறி நெசவாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றபோது போலீஸôர் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். அந்தப் போராட்டத்துக்கு வந்தவர்களின் லாரி கவிழ்ந்து பலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
இன்று 200 சதவீதம் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதால் நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நெசவாளர்களின் பெரும்பாலான கோரிக்கை கள் ஏற்கப்படவில்லை. அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
இ.எஸ்.எஸ். ராமன் (காங்கிரஸ்):
அதிமுக எம்.எல்.ஏ. பேசியதைக் கேட்டதும் எனக்கு "ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதது' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. நெசவாளர்களை கஞ்சித் தொட்டி திறக்கும் அளவுக்குக் கொண்டு சென்றவர்களுக்கு இது பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை. நெசவாளர்கள் இலவச மின்சா ரம் கேட்டு போராடியபோது அதிமுக அரசு அதனைக் கண்டு கொள்ளவில்லை. நெசவாளர் பிரச்னைக்காக நான்கைந்து முறை நடந்த பேச்சுவார்த்தையில் அதிமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.
ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக):
நெசவாளர்களின் பிரச்னை குறித்து அதிமுக எம்.எல்.ஏ. கோ.அரி நடுநிலை யோடு கருத்துகளை எடுத்துக் கூறினார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இ.எஸ்.எஸ். ராமன் எதிர்க்கட்சியைக் குற்றம்சாட்டி ஒரு புதிய பாணியைப் பின்பற்றுகிறார். விலைவாசி உயர்வுக்குக் காரணம் கேட்டால் ""உலகம் முழுவதும் விலைவாசி உயர்ந்து விட்டது'' என்கிறீர்கள். இப்போது விலைவாசி உயர்வுக்கு இந்தியாவே காரணம் என்று அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார். அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):
அமெரிக்க நாடாளுமன்றத் தில் இந்தக் கேள்வியை ஓ. பன்னீர் செல்வம் கேட்க வேண்டும்.
முதல்வர் கருணாநிதி:
இங்கே கேள்வி கேட்டால் அதனை அமெ ரிக்காவுக்கு "புஷ்' பண்ணக் கூடாது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்:
பள்ளிப்பட்டில் சுமார் 7,500 விசைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு பிரச்னை சமுகமாக முடிக்கப்பட்டுள்ளது. அதனால் வேலை நிறுத்தத்தை நெசவாளர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment