Friday, May 9, 2008

பெண் கருக்கொலை தடுப்பு வாசகத்துக்கு பரிசு

சென்னை, மே 7: பெண் கருக்கொலை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் விளம்பர வாசகங்களை தேரந் தெடுப்பதற்கான போட்டியை தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு புதன்கி ழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெண் சிசுக்கொலை, கருக்கொலை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப டுத்த பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலி, துண்டுப் பிரசுரம், விளம்ப ரப் பலகைகள் மூலம் விளம்பரம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள் ளது.இந்த விளம்பரங்களில் இடம்பெற, சிறந்த வாசகங்கள் பொதுமக்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

தேர்வு செய்யப்படும் சிறந்த வாசகங்க ளுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ஐந்து பேருக்கு தலா ரூ. 500-ம் வழங்கப்படும்.

1971 மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி தமிழ்நாட்டில் பெண் குழந் தைகள் பிறப்பு விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 974 ஆகவும், 1981-ல் 967 ஆகவும், 1991-ல் 948 என படிப்படி யாகக் குறைந்து 2001 கணக்கெடுப்பின் படி 1000 ஆண்களுக்கு 942 ஆக உள் ளது.

பெண் குழந்தைகளின் பிறப்பு விகி தம் குறைந்து வருவது வருங்கால சமு தாயத்தை வெகுவாகப் பாதிக்கும் என் பதால் பெண் சிசுக்கொலை, கருக் கொலையை தடுக்க நிறுத்த அரசு முனைப்புடன் உள்ளது.கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் சோதனை 1994-ம் ஆண்டு மத்திய அர சால் தடை செய்யப்பட்டது.

ஆனா லும் பெண் சிசுக்கொலை, கருக் கொலை, பெண்கள் சமுதாயத்தில் புறக்கணிக்கப்படுவது போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகின் றன. எனவே மக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விளம்பரம் செய்ய அரசு முடிவு செய் துள்ளது.

போட்டிக்கான விளம்பர வாசகங் களை மே 30-ம் தேதி வரை அனுப்ப லாம். பரிசு பெற்றவர்களுக்கு அதன் விவரம் கடிதம் மூலம் அனுப்பி வைக் கப்படும். விளம்பர வாசகங்கள் தனியாக முத் திரையிடப்பட்ட உறைகளில் ""பெண் கருக்கொலை தடுப்புப் போட்டி மே 2008'' எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி கள் துறை (நிர்வாகப் பிரிவு 7), சென்னை -6.

மேலும் விவரங்களுக்கு:

044-2432 1835

No comments: