Friday, May 9, 2008

கல்வி அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை

சென்னை, மே 6: போலி கையெ ழுத்து போட்டு ஒன்பது ஆசிரி யர்களை இட மாற்றம் செய்த உதவி கல்வி அதிகாரி உள் ளிட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல் வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.பேரவையில் செவ்வாய்க்கி ழமை கேள்வி நேரம் முடிந்ததும் இது குறித்து கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதம்:

நத்தம் விஸ்வநாதன் (அதிமுக):

திண்டுக்கல் மாவட்டம் நத் தம் உதவி தொடக்க அலுவலர் குருசண்முகம், தட்டச்சுப் பணியா ளர் தமிழரசி, டிராவல்ஸ் நிறுவ னம் நடத்தி வரும் திமுக பிரமுகர் சுரேஷ் குமார் ஆகியோர் தொடக் கக் கல்வி இயக்குநரின் கையெ ழுத்தை போலியாகப் போட்டு ஒன்பது ஆசிரியர்களை இடமாற் றம் செய்துள்ளனர்.அவர்களில் 8 பேர் பணியில் சேர்ந்து விட்டனர். ஒரு ஆசிரியர் பணியில் சேர்வதற்கு முன்பு, புதி தாகப் பொறுப்பேற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர் செல்வ குமார் இந்த மோசடியைக் கண்டு பிடித்துள்ளார்.

இதில் குருசண்முகம் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தமி ழரசி, சுரேஷ் குமார் இருவரும் தலைமறைவாகி விட்டதாகப் போலீஸôர் கூறுகின்றனர். இது போன்ற பிரச்னையில் யாரையும் தப்ப விடாமல் கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

ஞானசேகரன் (காங்கிரஸ்):

உதவி தொடக்க கல்வி அதிகாரி யின் கையெழுத்தைப் போலியாக போட்டு ஆசிரியர்கள் இடமாற் றம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் வேலியே பயிரை மேய்ந்துள்ளது.இது போன்ற சம்பவங்கள் வேறு எங்காவது நடந்துள்ளதா?

அமைச்சர் தங்கம் தென்னரசு:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உதவி தொடக்க கல்வி இயக்குந ரின் கையெழுத்தைப் போலியாக போட்டு ஒன்பது ஆசிரியர்களை இடமாற்றம் செய்துள்ளனர். ஆசி ரியர்கள் இடமாற்ற உத்தரவில் மாவட்ட தொடக்கக் கல்வி அலு வலர்தான் கையெழுத்து போடு வது வழக்கம்.இதில் உதவி தொடக்க கல்வி இயக்குநரின் கையெழுத்து இருந் ததால் சந்தேகம் வரவே விசா ரணை நடத்தப்பட்டது. அதில் ஆசிரியர்கள் இடமாற்றம் செய் யப்பட்டது கண்டறியப்பட்டது.

இந்தத் தகவல் கிடைத்ததும் விசா ரணை நடத்தப்பட்டு ஒன்பது ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய் யப்பட்டனர்.இந்த விஷயத்தில் எதையும் மூடி மறைக்க அரசு விரும்ப வில்லை. இதற்குக் காரணமான உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.தலைமறைவான தமிழரசி, சுரேஷ் குமார் ஆகியோரைப் போலீஸôர் தேடி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப் பட்ட அனைவரின் மீதும் கிரிமி னல் நடவடிக்கை எடுக்கப்படும்.வேறு எங்கும் இதுபோன்ற சம்ப வங்கள் நடக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள் ளது. இனி இப்படிப்பட்ட சம்ப வங்கள் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார் தங்கம் தென்னரசு.

No comments: