Friday, May 9, 2008

ஒத்துழைப்பு தாருங்கள்: கருணாநிதி வேண்டுகோள்

சென்னை, மே 6: தமிழகம் மீண் டும் அமைதிப் பூங்காவாக மலர அனைவ ரும் ஒத்து ழைப்பு தர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் இரு பிரிவினருக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட தடுப்புச் சுவர் இடிக்கப் பட்டு பாதை ஏற்படுத்தப்பட்டுள் ளது. இது குறித்து பேரவையில் செவ்வாய்க்கிழமை முதல்வர் கரு ணாநிதி பேசியதாவது:

ஜாதி மோதல்கள் இல்லாமல் தமிழகம் மீண்டும் அமைதிப் பூங் காவாக மலர அனைவரும் ஒத்து ழைப்பு தர வேண்டும்.மதுரை மாவட்டம் உத்தபுரத் தில் கடந்த சில நாட்களாக உருவா கியுள்ள பிரச்னை குறித்து தமிழ கத்தில் உணர்ச்சி அலைகள் அலைமோதிக் கொண்டிருக்கின் றன. இந்தப் பிரச்னை ஜாதிப் பூச லாக மாறி, மோதல்கள் உருவாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்ட நேரத்தில் பிரச்னை சுமுகமாக முடிந்திருப்பது மகிழ்ச்சியைத் தரு கிறது.

தடுப்புச் சுவரை அவமானச் சின்னமாகக் கருதி அதை இடிக்க வேண்டும் என்று பெரும்பான் மையான ஒடுக்கப்பட்ட மக்க ளும், சுவரை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று எதிர் தரப்பின ரும் கூறினார்கள். இது தொடர் பாக நான் மதுரை மாவட்ட ஆட் சியரிடம் விரிவாகப் பேசினேன்.

ரத்த வெள்ளம்:

அதிமுக எம்.எல்.ஏ. துரைராஜ் சொன்ன தைப்போல 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கலவரத்தின் தொடர்ச்சியாக அந்தச் சுவர் கட் டப்பட்டது என்பதை அனைவ ரும் அறிவார்கள். 20 ஆண்டுக ளுக்கு முன்பு ஏதோ ஒரு நாள் மட் டுமல்ல தொடர்கதையாகவே அந் தப் பகுதியில் இதுபோன்ற கலவ ரங்கள், மோதல்கள் அந்தப் பகுதி யில் நடந்து கொண்டே இருக்கின் றன.இதற்கு முன்பு தமிழகத்தின் தென்பகுதிகளில் ஏற்பட்ட ரத்த வெள்ளம், குளங்களிலும், ஆறுக ளிலும், வாய்க்கால்களிலும் ஓடிய தும், அதில் தலைகள் மிதந்ததும் சட்டப் பேரவையில் உறுப்பினர்க ளால் சொல்லப்பட்ட செய்தி தான்.

பாதையும், பாதுகாப்பும்:

உத்தபுரத்தில் ஒரு தரப்பினர் பாதை வேண்டும் என்கிறார்கள். மற் றொரு தரப்பினர் பாதுகாப்பு வேண்டும் என்கிறார்கள். "பாதை யும் கொடுங்கள், பாதுகாப்பும் கொடுங்கள்' என்று நான் மாவட்ட ஆட்சியரிடம் கூறி னேன். அங்குள்ள நீண்ட சுவரில் பெரிய நிலைவாசல் ஒன்றை தோற்றுவித்து பாதை ஏற்படுத்தப் பட்டுள்ளது. அந்தப் பாதை வழி யாக யார் வேண்டுமானாலும் செல்லலாம்.பாதையும் இருக்கட்டும், பாது காப்புக்கு அந்தச் சுவரும் இருக் கட்டும் என்று அங்கு இரு தரப்பி னரும் சகோதரர்களாக வாழ வழி வகை செய்யப்பட்டுள்ளது.

உயர் வர்க்கத்தினர் என்று தங் களை நினைத்துக் கொண்டிருக் கும் ஆண்களில் சிலர் நாங்கள் இங்கே வசிக்க மாட்டோம் என்று ரேஷன் கார்டுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு அருகில் உள்ள மலைப் பகுதிக்கு சென்று விட்டதாக செய்தி வந்துள்ளது.அதனை கோபத்தின் அடையா ளம் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர ஜாதி வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் என்று கூற முடியாது.ஆண்கள் மலைப் பகுதிக்கு சென்றாலும் அவர்கள் வீட்டுப் பெண்கள் அங்கேயே இருக்கிறார் கள். யாரும் செல்லவில்லை என்று மாவட்ட ஆட்சியர் தகவல் அனுப்பியுள்ளார். அந்த அளவுக் குப் பெண்கள் முன்னேறி இருக்கி றார்கள்.

சில அரசியல் கட்சிகள் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று அதிமுக எம்.எல்.ஏ. துரைராஜ் கூறினார். ஒரு சம்பவம் நடந்தால் அரசியல் கட்சிகள் தங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளத்தான் செய்வார்கள்; அதில் தவறு ஏதும் இல்லை. பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்பட்டு சமத்துவ நிலை ஏற் பட்டதற்காக உத்தபுரத்தை இனி "உத்தமபுரம்' என்று அழைக்கலாம் என்றார்.

No comments: