சென்னை, மே 5: உணவுப் பற்றாக்குறைக்கு இந்தியர்களே காரணம் என்று புஷ் கூறிய கருத்து இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்கா அளித்த அங்கீகாரம் என்று சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி கொறடா பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை மானி யக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
உணவுப் பற்றாக்குறைக்கு இந்தியர்களே காரணம் என்று கூறியதன் மூலம் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியாவின் வளர்ச்சிக்கு அங் கீகாரம் அளித்துள்ளார். ஒரு காலத்தில் அமெரிக்க டாலருக்கு சளி பிடித்தால் இந்திய ரூபாய்க்கு காய்ச்சல் வரும் என்பார்கள். இன்று இந்திய ரூபாய்க்கு சளி பிடித்தால் அமெரிக்க டாலருக்கு காய்ச்சல் வருகிறது.மதிய உணவு திட்டத்துக்கு நிதி இல்லையென்றால் பிச்சை எடுக்க வும் தயார் என்றார் காமராஜர்.அதுபோல தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக டாடா போன்ற தொழில் நிறுவனங்களிடம் முதல்வர் கருணாநிதி பிச்சை எடுக்கிறார்.
தினந்தோறும் ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. தொழில் துறையில் தமிழகம் சாதனைப் படைத்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் பிரச்னையில் ரத்தக் களரி நடந்த சிங்குரூக்கு வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரான ஸ்வராஜ்பாலை மேற்கு வங்க அரசு அழைத்து வந்தது. ""விவசாயத்தி னால் எல்லோருக்கும் வேலை கொடுக்க முடியாது. தொழிற்சாலைகள் அமைத்தால் தான் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்'' என்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா முன்னிலையில் ஸ்வராஜ் பால் பேசியிருக்கிறார்.
ஒரு காலத்தில் டாடா, பிர்லாவுக்கு நெருக்கமாக இருந்தால் ஏழைகள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற பயம் இருந்தது. ஆனால் இன்று டாடாவும், பிர்லாவும் நெருக்கமானவர்கள், அழைத்தால் தொழில் தொடங்க முன்வருவார்கள் என்றால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டு வரும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இன்று அர சியலாக்கப்பட்டு வருகிறது. சாத்தான்குளத்தில் டைட்டானியம் தொழிற்சாலை முடக்கப்பட்டதால் எதிர்காலத்தில் ஒரு ஜாம் ஷெட்பூர் உருவாகப் போகிறது என்ற கனவு கருவிலேயே கலைந்து விட்டது என்றார் .
No comments:
Post a Comment