சென்னை, மே 9: தி.மு.க. ஆட் சியில் தமிழகம் ஆயுதச் சந் தையாக மாறிவிட்டது என்று அ.தி.மு.க.எம்.எல்.ஏ. சேகர்பாபு குற்றம் சாட்டினார்.சட்டப் பேரவையில் வெள் ளிக்கிழமை நடைபெற்ற காவல் - தீயணைப்பு - மதுவி லக்கு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது:
தி.மு.க. ஆட்சியில் தமிழ கம் ஆயுதச் சந்தையாக மாறி விட்டது. கடந்த நான்கு மாதங்களில் திருட்டு, கொலைச் சம்பவங்கள் அதிக ரித்துள்ளன. தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை போலீஸ் நிலை யத்தில் துப்பாக்கிகள் திருட் டுப் போய் உள்ளன.அ.தி.மு.க. ஆட்சியில் குற் றவாளிகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டனர்.தற்போது சமூக விரோதிகள் மீது எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படுவதில்லை.
தற்போது 47 ஐ.பி.எஸ்.அதிகாரிகளின் பணியிடங் கள் காலியாக உள்ளன. இப்ப டிப்பட்ட நிலையில் சட்டம் ஒழுங்கை எப்படிக் காப் பாற்ற முடியும்? சென்னை மாநகரில் மட் டும் கடந்த நான்கு மாதங்க ளில் 10 கொலைகளும், 18 பெரிய திருட்டுகளும், 108 சிறிய திருட்டுகளும் நடந் துள்ளன. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தை விசா ரிக்க கமிஷன் அமைக்கப்பட் டுள்ளதாக முதல்வர் அறிவித் தார். ஆனால் அது இன்ன மும் அரசு இதழில் வெளியி டப்படவில்லை. விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்த பிறகு சம்பந்தப்பட்ட துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.விசாரணை குறிப்பிட்ட திசையில்தான் செல்ல வேண் டும் என்று அரசு அறிவுறுத்து வது போல இந்த சம்பவம் உள்ளது என்றார் சேகர் பாபு.
No comments:
Post a Comment