Friday, May 9, 2008

70 சதவீத மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை: பாமக

சென்னை, மே 6: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களில் 70 சதவீதம் பேருக்கு வேலை கிடைப்பதில்லை என்று சட்டப் பேரவை பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார். பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர் கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல் லூரிகள், பல்கலைக்கழகங்களில் படிக் கும் மாணவர்களில் 35 சதவீதம் பேர் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு செல்ல முடிவதில்லை. நேர்முகத் தேர் வுக்கு செல்லும் மாணவர்களில் 35 சதவீ தம் பேருக்கு வேலை கிடைப்பதில்லை.மொத்தம் 70 சதவீத மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்று ஒரு தனியார் தொண்டு நிறுவனம் தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.

தமிழக கல் லூரிகளில் படிக்கும் மாணவர்களில் 70 சதவீதம் பேருக்கு முதல் மூன்று ஆண்டு களில் வேலை கிடைப்பதில்லை என்று இந்திய தொழில் கூட்டமைப்பு தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. பல்க லைக்கழகத்தில் படித்து வெளியே வரும் மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைப் பதில்லை என்று சென்னை பல்கலைக்க ழக துணைவேந்தர் ராமச்சந்திரனும் கருத்து தெரிவித்துள்ளார்.எனவே தமிழகத்தில் உள்ள கல்லூ ரிகளையும், பல்கலைக்கழகங்களை யும் தரம் உயர்த்த வேண்டும்.

ஆந்திரா வைப்போல மாவட்டம் தோறும் உறைவிடப் பள்ளிகளை தொடங்க வேண்டும். லாப நோக்கோடு செயல்ப டும் சுயநிதி கல்லூரிகளை கண்ட றிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மை யினர் நடத்தும் கல்லூரிகளை ஆய்வு செய்ய வேண்டும். உயர் கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களை கண்டறிந்து அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஜி.கே. மணி.

No comments: