சென்னை, மே 9: வேலூர், தூத்துக்குடி நகராட்சிகளை மாநகராட் சிகளாக தரம் உயர்த்த வகை செய்யும் சட்ட முன்வடிவுகள் பேரவை யில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.அவற்றை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
வேலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று, ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று, தூத் துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
No comments:
Post a Comment