Friday, May 9, 2008

ஜெயப்பிரதாவிடம் எப்படி பேசுவது?

சென்னை, மே 6: இந்தி தெரியாமல் நடிகை ஜெயப்பிரதாவிடம் எப்படி பேசுவது? என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. பெ.சு. விஜயகு மார் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதா வது:

இந்தி பாரத மொழி. ஆங்கிலம் பன்னாட்டு மொழி. தமிழகத் தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு தமிழும், ஆங்கிலமும் மட் டும் தெரிந்தால் போதாது. இந்தியும் தெரிய வேண்டும்.இந்தி கற்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வசதிகளை அரசு செய்து தர வேண்டும். இந்தி என்ன வேம்பா? கசப்பா? அது வும் நம் சகோதரர்கள் பேசும் மொழிதானே. எதிர்கால சமுதாயம் வளர இந்தி அவசியமானது.

ஹேமமாலினியிடம் தமிழில் பேசலாம். ஜெயப்பிரதாவி டம் பேச முடியுமா? அதனால் அனைவரும் இந்தி கற்க வேண் டும்.போக்குவரத்து, டாஸ்மாக், மணல் குவாரிகளை நடத்தும் அரசே அனைத்துக் கல்லூரிகளையும் ஏற்று நடத்த வேண்டும்.தனியார் கல்லூரிகளில் அடுத்த ஆண்டுக்கான இடத்துக்கு இப் போதே அட்வான்ஸ் புக்கிங் முடிந்து விட்டது. மதிய உணவு, ஹாஸ்டல் ஆகியவற்றை தனியார் கல்லூரிகள் கட்டாயமாக திணிக்கின்றன. இதனை அரசு தடை செய்ய வேண்டும் என்றார் விஜயகுமார்.

No comments: