சென்னை, மே 6: எண்ணிக்கை அதிகரிப்போம் என்று கூறி உயர் கல்வியின் தரத்தை பின்னுக்கு தள்ளி விட்டீர்கள் என்று அதி முக எம்.எல்.ஏ. மு. தம்பித்துரை குற்றம் சாட்டினார்.பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
2007-ம் ஆண்டு உயர் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் ""தரத்தினை உயர்த்துவோம், எண்ணிக்கையை அதிகரிப்போம்'' என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் 2008-ம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பில் ""எண்ணிக்கையை அதிகரிப்போம், தரத்தினை உயர்த்துவோம்'' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதாவது உயர் கல்வி யின் தரத்தை பின்னுக்கு தள்ளி விட்டீர்கள்.எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலம் உயர் கல்வியின் பொற்காலம். அவ ரது ஆட்சியில்தான் சுயநிதி கல்லூரிகள் அதிகமாக தொடங்கப்பட் டன. முதல்வர் கருணாநிதி சுயநிதி கல்லூரிகளை எதிர்ப்பவர்.
தமிழ கத்தில் தற்போது 1,400 கல்லூரிகள் உள்ளன. அதில் 1,090 கல்லூரி கள் சுயநிதிக் கல்லூரிகள். 108 கல்லூரிகள் மட்டுமே அரசுக் கல்லூரி கள்.லட்சக்கணக்கான தமிழர்கள் இன்று அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் பணிபுரிகின்றனர். இதற்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட சுயநிதிக் கல்லூரிகளே கார ணம்.எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் எட்டு பல்கலைக்கழகங்களும், ஜெயலலிதா ஆட்சியில் நான்கு பல்கலைக்கழகங்களும் தொடங்கப் பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் 6 அரசு கல்லூரிகள் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டன.
கல்வித் துறையில் அரசியல் தலையீடு இல்லை என்கிறீர்கள்.ஆனால் அரசியல்வாதியான சபாபதி மோகனை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்துள்ளீர்கள்.இது எந்த வகையில் நியாயம்? என்றார் தம்பித்துரை.
அமைச்சர் பொன்முடி:
கடந்த இரண்டு ஆண்டுகால திமுக ஆட் சியில் 6 அரசு கலைக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மூன்று கல்லூரிகள் மட்டுமே தொடங்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் அரசு கலைக்கல் லூரிகளில் சுயநிதிப் பிரிவை தொடங்கி அதிக கட்டணம் வசூலிக் கப்பட்டது.சபாபதி மோகன் தேர்தலில் தோற்ற பிறகு மீண்டும் கல்விப் பணிக்கு திரும்பியவர். சட்டப் பேரவை தலைவராக இருந்த பி.எச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் துணை வேந்தராக நியமிக்கப்படவில்லையா? மத்திய அமைச்சராக இருந்த சந்திரசேகர் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்திருக்கிறார் என்றார் பொன்முடி.
No comments:
Post a Comment