சென்னை, மே 5: எம்.எல்.ஏ.க்களுக்கு ரயிலில் எமர்ஜென்சி கோட்டாவில்கூட இடம் கொடுக்கவில்லை என்று சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் டி. சுதர்சனம் புகார் தெரிவித்தார். பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் இது குறித்து பேசியதாவது:
நாகர்கோயிலில் இருந்து சென்னை வர எமர்ஜென்சி கோட்டாவில் விண்ணப்பித்த நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. இதனால் சட்டப் பேரவை உறுப்பினர்கள் விடுமுறை நாட்களில் தொகுதிக்குச் சென்று மக்கள் பணியாற்ற முடிவதில்லை. எனவே எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் எமர்ஜென்சி கோட்டாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன்:
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபால் இது குறித்து தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியைப் பார்த்தேன். அவரது கோரிக்கைகள் நியாயமானவை. பேரவையின் சார்பில் இப்பிரச்னை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
No comments:
Post a Comment