சென்னை, மே 4: உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறைக்கு அமெரிக்காவே காரணம் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறைக்கு இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் காரணம் என்று அமெரிக்க அதிபர் புஷ் வீண்பழி சுமத்தி யுள்ளார். இது கண்டிக்கத் தக்கது.அமெரிக்கா போன்ற மேற் கத்திய நாடுகள் தங்களது விவசாய, பொருளாதாரக் கொள்கையை இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மீது திணிக்கின்றன. அதன் விளைவாகத்தான் உலகம் முழுவதும் உணவுப் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது.
உற்பத்தி குறைவே பற்றாக்குறைக்கு காரணம்:
உற்பத்தி குறைவுதான் உணவுப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம். தொழில் துறையின் வளர்ச்சியால் சுற்றுச்சூழல் மாசுபட்டு காற்றில் கார்பன்-டைஆக்ûஸடு அளவு அதிகரித் துள்ளது. இதனால் தட்ப வெப்ப நிலையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள் ளது. இதனால் உணவு உற்பத்தி குறைந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்துள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மண்ணின் தரத்தை குறைத்து நிலத்தை மலடாக்குகிறது. இதனாலும் உணவு உற்பத்தி குறைகிறது. இதற்கெல்லாம் பசுமைப் புரட்சி என்ற பெயரில் அமெரிக்கா மேற் கொண்ட விவசாய, பொருளாதாரக் கொள்கைகளே காரணம்.
உலகம் முழுவ தும் 6-ல் ஒரு பங்கு மக்கள் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்கின்றனர். இந்தியாவிலும் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ளும் மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். உலகின் 40 நாடுகளில் உணவு உற்பத்தியே இல்லை.அந்த நாடுகள் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளை நம்பியுள்ளன. இதை யெல்லாம் அமெரிக்க அதிபர் புஷ் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
ஹெக்டேருக்கு 20 டன்:
300 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹெக்டேருக்கு 20 டன் உணவு உற்பத்தி செய்தார்கள். ஆனால் இன்று 3 அல்லது 4 டன்தான் உற்பத்தி செய்ய முடிகிறது. நம் நாட்டுக்கென்று பாரம்பரியமான விவசாயக் கொள்கை உள்ளது.விவசாயம் என்பது நம் நாட்டில் தொழில் அல்ல. வாழ்க்கை முறை. நமது பாரம்பரியமான விவசாயக் கொள்கையைப் பின்பற்றி ஹைதராபாதில் ராஜீவ் பிரதாப் என்ற விவசாயி ஒரு மாமரத்தில் 40 ஆயிரம் மாங்கனிகளை உற்பத்தி செய்து சாதனை படைத் துள்ளார். நமது பாரம்பரிய விவசாய முறைகளை வேளாண் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்வதில்லை.அதனால்தான் இந்தியாவில் உணவு உற்பத்தியை அதிக ரிக்க முடியவில்லை.
ஆபத்தான விஷயம்:
உணவுப் பற்றாக்குறை மிக வும் ஆபத்தான விஷயம். ஜனநாயகத்துக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் உணவுப் பற்றாக்குறை ஆபத்தை உண்டாக்கும். எனவே மத்திய அரசு தனது விவசாயக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்றார் முரளி மனோகர் ஜோஷி.
பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன், அகில இந்தியச் செயலாளர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச்செயலாளர் தமிழிசை சௌந்திரராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment