சென்னை, மே 7: நெசவாளர்களுக் காக யாருடைய ஆட்சியில் கஞ் சித் தொட்டி திறக்கப்பட்டது என்பது குறித்து பேரவையில் திமுக, அதிமுக, காங்கிரஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற கைத்தறி - கதர் - சிறு தொழில் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விடி யல் சேகர், ""நெசவாளர்களுக்கு கடந்த கால ஆட்சியில் கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது'' என்றார்.
அதற்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்போது பேசிய சட்டப் பேரவை அ.தி.மு.க. கொறடா கே.ஏ. செங்கோட்டையன், ""தற் போதைய தி.மு.க. ஆட்சியிலும் கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது.கஞ்சித் தொட்டி திறக்கப்பட்ட சம்பவத்தில் அ.தி.மு.க.எம்.எல்.ஏ. கோ.அரி போன்றவர் கள் கைது செய்யப்பட்டனர்'' என் றார்.
அது போல தி.மு.க. எம்.எல்.ஏ.ஓ. சுப்பிரமணியம் பேசும் போது குறுக்கிட்ட செங்கோட்டையன், ""1996-2001 திமுக ஆட்சியில் நெச வாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ரூ. 40 கோடி நிலுவைத் தொகை 2003-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப் பட்டது'' என்றார்.
அப்போது கதர்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் குறுக் கிட்டு, ""கடந்த அ.தி.மு.க. ஆட்சி யில் நெசவாளர்களுக்கு ரூ. 25 கோடி நிலுவைத் தொகை வழங் கப்படாமல் இருந்தது. அதில், ரூ. 12.5 கோடி தற்போது வழங்கப் பட்டுள்ளது'' என்றார்.
No comments:
Post a Comment