சென்னை, மே 6: தமிழகத் தில் முதல் கட்டமாக 14 மாவட்டங்களில் கட்டண மில்லா தொலைபேசி எண் "108'-ஐக் கொண்டு இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த அவசரகால ஆம்பு லன்ஸ் ஊர்தி சேவைத் திட் டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக முதல்வர் கரு ணாநிதி முன்னிலையில் மருத்துவ சேவையில் அனுப வம் உள்ள "எம்ரி' நிறுவனத்து டன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையெ ழுத்தானது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி முன்னி லையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் மக் கள் நல்வாழ்வுத் துறை சிறப் புச் செயலாளர் பி.டபிள்யூ.சி. டேவிதார், எம்ரி நிறுவனம் சார்பில் அதன் முதன்மை நிர்வாக அலுவலர் வெங்கட் ஆகி யோர் ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டனர்.இதன்படி எம்ரி நிறுவனம் சென்னையில் மத்திய அவசர கால செயல்பாட்டு நிலையம் ஒன்றை அமைத்து அவசர கால சேவையில் ஈடுபடும்.
கட்டணம் இல்லா தொலைபேசி எண் "108' மூலம் 24 மணி நேரமும் இந்த மையத்தை மக் கள் தொடர்பு கொள்ளலாம்.இந்தத் திட்டத்தை செயல் படுத்த தேவையான பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோரைத் தேர்வு செய்யும் பொறுப்பு "எம்ரி' நிறுவ னத்திடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது.
முதல் கட்டமாக 14 மாவட் டங்களில் 198 ஆம்புலன்ஸ் களை இயக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த ஆம்பு லன்ஸில் அவசரகால சிகிச் சையில் தேர்ச்சி பெற்ற பணி யாளரும், ஓட்டுநரும் பணிய மர்த்தப்படுவார்கள். ஆம்பு லன்ஸýக்கு பொது மக்கள் கட்டணம் செலுத்தத் தேவை யில்லை. இந்த ஆம்பு லன்ûஸ கண்காணிக்க நவீன தொழில் நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்துக்கு ஆலோசனை வழங்க மாநில அளவில் தலைமைச் செயலா ளரை தலைவராகக் கொண்ட ஆலோசனைக் குழுவும், ஒவ்வொரு மாவட் டத்திலும் மாவட்ட ஆட்சி யரை தலைவராகக் கொண்ட மாவட்ட நிர்வாகக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்துக்கு தேவையான கட்டடம் கட்ட வும், தொழில்நுட்பக் கருவி கள், தளவாடப் பொருட்கள் வாங்க முதல் ஆண்டில் ரூ.22.89 கோடியையும், நிர்வா கச் செலவினம், ஊதியம், எரி பொருள் செலவு, மருத்துவச் செலவு, பராமரிப்புச் செலவு, காப்பீட்டுச் செலவு, பயிற்சி, விளம்பரம் ஆகியவற்றுக் காக ரூ. 13.13 கோடியையும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
No comments:
Post a Comment