சென்னை, மே 5: சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. முதல்வர் கருணாநிதியின் சார்பில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசினார்.
அப்போது மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி, கருணாநிதியின் சகோதரி மகன் அமிர்தம் உள் ளிட்டோரும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசன் ஆகியோரும் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து பேரவை நிகழ்ச்சிகளைக் கவனித்தனர்.
No comments:
Post a Comment