சென்னை, மே 4: மகளிருக் கான இட ஒதுக்கீடு குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகலாம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தி.மு.க.பிரமுகர் இல்ல திருமண விழாவில் அவர் பேசியது:
இன்னும் ஓரிரு நாளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்படும் என்ற செய்தி வந்துள்ளது. பெண்கள் முன்னேற அவர்களுக்குரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் கவிஞர் கனிமொழி பேசினார். மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால் அந்த ரகசியத்தை அறிந்து கனிமொழி அப்படி பேசினார் என்று நினைக்கிறேன் என்றார் கருணாநிதி.
33 சதவீத இட ஒதுக்கீடு எப்போது கிடைக்கும் என்று பெண்கள் எதிர்பார்ப்போடு இருக்கும் நிலையில் இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகலாம் என்று கருணாநிதி பேசியிருப்பது பெண்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
No comments:
Post a Comment