Friday, May 9, 2008

"அரசு ஊழியர்களுக்கு கைத்தறி கட்டாயம்'

சென்னை, மே 7: அரசு ஊழி யர்கள் அனைவரும் கைத்தறி துணி அணிவதை கட்டாய மாக்க வேண்டும் என்று காங் கிரஸ் எம்.எல்.ஏ.கே.எஸ்.கே. ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தார்.சட்டப் பேரவையில் புதன் கிழமை நடைபெற்ற கைத்தறி, கதர், சிறுதொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

கேரளத்தைப் போல தமிழகத்திலும் அரசு ஊழியர் கள் அனைவரும் பணியின் போது கைத்தறி அணிவதை கட்டாயமாக்கி அரசு உத்தர விட வேண்டும்.கைத்தறி துணி வாங்க, பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு மூன்று முட்டை வழங்குவதுபோல மூன்று சீருடை வழங்க வேண்டும்.மதுரை மாநகரில் 50 அடி உயரத்துக்கு மேல் கட்டடம் கட் டக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.

அதனை தளர்த்தி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வெளியே பெரிய கட்டடங் கள் கட்ட அரசு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் மதுரை வளர்ச்சி அடைந்த நகரமாக மாறும். மதுரையில் அனுமதி பெறாமல் கட்டப் பட்ட 25 ஆயிரம் கட்டடங் கள் உள்ளன. மதுரைக்கு என தனியாக அரசாணை பிறப் பித்து இந்தக் கட்டடங்களை வரையறை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அரசுக்கு ரூ. 25 கோடி வருமா னம் கிடைக்கும்.

சாதி சான்றிதழ் கிடைக்கா மல் காட்டுநாய்க்கன் சமுதாயத்தினர் அவ திப்படுகின்றனர்.அவர்களுக்கு சான்றி தழ் கிடைக்க அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராஜேந்தி ரன்.ஜி. லதா (மார்க்சிஸ்ட்):ஆன் லைன் மூலம் முன்பேர வணி கத்தில் ஈடுபடுவதால் இரும் புத் தாதுவின் விலை கடுமை யாக உயர்ந்துள்ளது. இத னால் சிறிய தொழிற்சாலை கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.வெளிநாடுகளை நம்பியி ருப்பதால் நெசவுத் தொழி லுக்கு தேவையான நூலின் விலை கடுமையாக உயர்ந் துள்ளது.

இதனால் கைத்தறி நெசவுத் தொழில் பாதிக்கப் பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள 18 நூற் பாலைகளில் 13 நூற்பாலை கள் மூடப்பட்டுள்ளன.அதில் ஐந்து நூற்பாலை களை அரசு சீரமைக்கும் என்று 2006-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ம் தேதி பேரவை யில் அமைச்சர் ராஜா அறி வித்தார்.ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. பீடி, தீப் பெட்டி, பட்டாசுத் தொழி லுக்கு தேவையான மூலப் பொருட்களுக்கு வரிச்ச லுகை அளிக்க வேண்டும் என்றார் லதா.

No comments: