Friday, May 9, 2008

பஞ்சாலைகள் மூடப்படும் அபாயம்

சென்னை, மே 5: கோவை மாவட்டத்தில் உள்ள பஞ்சாலைகள் மூடப்ப டும் அபாய நிலையில் இருப்பதாக அதிமுக எம்.எல்.ஏ. செ.ம.வேலுச்சாமி குற்றம் சாட்டினார். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

தமிழ்நாடு டெக்ஸ்டைல் கார்ப்ப ரேஷன், தேசிய டெக்ஸ்டைல் கார்ப் பரேஷன் உள்பட கோவை மாவட் டத்தில் 3 ஆயிரம் சிறிய மற்றும் பெரிய பஞ்சாலைகள் உள்ளன.அவற்றில் 30 சதவீத பஞ்சாலைகள் மூடக்கூடிய அபாய நிலையில் உள்ளன. செயற்கையாக ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடு, கச்சாப் பொருள்களின் கட்டுக்கடங்காத விலையேற்றம், வங்கி மானியம் கிடைக்காதது போன்றவற்றால் தென்னிந்தியாவின் மான்செஸ்டராக விளங்கிய கோவை யில் பஞ்சாலைகள், பனியன் தொழிற் சாலைகள், விசைத் தறிகள், பம்பு செட் தொழிற்சாலைகள் போன் றவை நலிவடைந்து வருகின்றன.

2001-ல் ரூ.3,116 கோடியாக இருந்த தகவல் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதி அதிமுக ஆட்சியில் ரூ.15 ஆயிரம் கோடியாக அதிகரித்தது.தொழில் முனைவோர்களை ஈர்க்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த வெளிப்புற கட்டமைப்பு, கல்விசார் கட்டமைப்பு, அறிவுத் திறன் கட்ட மைப்பு ஆகியவை உருவாக்கப்பட்ட தாலும் தமிழகம் அமைதிப் பூங்கா வாக இருந்ததாலும் மிகப் பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்தன.

சில குறிப்பிட்ட தொழில்களுக்கு, குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும்தான் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுகின்றன. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் என் னென்ன சலுகைகள் வழங்கப்பட் டுள்ளன என்பதை வெளிப்படை யாக அறிவிக்க வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலங்க ளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு ஏற்கெனவே உள்ள தொழில்களுக்கு என்ன பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்துள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். புதிய தொழிற்சாலைகளுக்கு சுமார் 1,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டதால் தேர் வுக்கு படிக்கும் மாணவர்கள் மின்சா ரம் இல்லாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

விசைத்தறி நெசவாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் மூன்று முறை மின் கட்டணம் குறைக்கப்பட்டது.நவீன விசைத்தறிக்கான நாடா வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப் பட்டது. பல்லடத்தில் நவீன விசைத் தறி பூங்கா அமைக்க அதிமுக ஆட்சி யில் ரூ.4 கோடியே 87 லட்சம் ஒதுக் கப்பட்டது.திருப்பூர் பனியன் தொழிற்சாலை கள் ரூ.8 ஆயிரம் கோடி முதல் ரூ.10 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி செய் தன. மின் தட்டுப்பாடு, டாலர் வீழ்ச்சி, மானியம் இல்லாதது ஆகிய காரணங்களால் இப்போது ரூ.1,500 கோடிக்கு கூட ஏற்றுமதி செய்ய முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

No comments: