Friday, May 9, 2008

முதலிடம் பெற்ற ராஜேஷ்குமாருக்கு பாமக எம்.எல்.ஏ. பரிசு

சென்னை, மே 9: பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற எம். ராஜேஷ்குமாருக்கு தனது ஒரு மாத சம்பளத்தை பரிசாக வழங்குவதாக செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. ஆறுமுகம் (பாமக) அறிவித்தார்.

பேரவையில் வெள்ளிக்கிழமை பேசிய அவர், ""பிளஸ் 2 தேர்வில் எனது செங்கல்பட்டு தொகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நி லைப்பள்ளி மாணவர் எம்.ராஜேஷ்குமார் 1200க்கு 1,182 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு எனது ஒரு மாத சம்பளத்தை பரிசாக வழங்குகிறேன்'' என்றார்.

No comments: