Friday, May 9, 2008

"அரசியல்வாதிகள் - சமூக விரோதிகள் - போலீஸ் உறவை துண்டிக்க வேண்டும்'


"அரசியல்வாதிகள் - சமூக விரோதிகள் - போலீஸ் உறவை துண்டிக்க வேண்டும்' சென்னை, மே 9: அரசியல்வாதி கள், காவல் துறையினர், சமூக விரோதிகள் ஆகியோருக்கு இடையே உள்ள உறவை முற்றி லும் துண்டிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் டி. யசோதா (படம்) தெரிவித்தார்.சட்டப்பேரவையில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற காவல் - தீய ணைப்பு - மதுவிலக்கு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசிய தாவது:

அரசியல்வாதிகள், காவல் துறை, சமூக விரோதிகள் ஆகி யோருக்கு இடையே உள்ள நெருங்கிய தொடர்பால் குற்றங் கள் அதிகரித்து வருகின்றன.எனவே இந்தத் தொடர்பை முற்றி லும் துண்டிக்க வேண்டும்.குற்றவாளிகளை மட்டுமே போலீஸôர் கைது செய்ய வேண் டும். மனைவி, தாய் போன்ற குற்ற வாளியின் குடும்பப் பெண்களை கைது செய்யக் கூடாது. பெண் களை இரவில் கைது செய்யாமல் பகலில் கைது செய்து மாலைக் குள் விசாரணை நடத்த வேண் டும்.வரதட்சணை வழக்குகளை மனித உரிமை ஆணையம் மூலம் விசாரிக்க வேண்டும்.

தங்கத்தின் விலையைவிட நிலத்தின் விலை அதிகமாக உள்ளது. நில மோசடி செய் பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும்.உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுக ளில் அதிகாரப்பூர்வமற்ற முறை யில் பல காவலர்கள் வேலை செய் கின்றனர். இதனால் காவல் துறை பணிகள் பாதிக்கப்படுகின்றன.இது தடுக்கப்பட வேண்டும்.போலீஸ் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் அளவை அதிகப்படுத்த வேண் டும் என்றார் டி. யசோதா.

ஜி.கே. மணி (பாமக):

காவல் துறை தன்னாட்சி பெற்ற அமைப் பாக யாருடைய தலையீடும் இல் லாமல் இயங்க வேண்டும்.தருமபுரி அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் துப்பாக்கி திருட்டுபோன சம்ப வத்தில் காவலர்களே சம்பந்தப் பட்டுள்ளனர். ஆனால் இதற்காக அப்பாவி பாமகவினர் குடும்பங் களை போலீஸôர் அடித்து துன் புறுத்தி உள்ளனர்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் குடியிருப்பில் பரிமளா என்ற பெண் பொறியாளர் ஏப்ரல் மாதம் 16-ம் தேதி கொலை செய் யப்பட்டார்.ஆனால் இதனை தற்கொலை என்று போலீஸôர் கூறுகின்ற னர். இது குறித்து தீவிர விசா ரணை நடத்த வேண்டும்.

வீடுகளில் சுற்றுலாப் பயணி களை தங்க வைக்கலாம் என்ற சுற் றுலா துறை அமைச்சரின் அறி விப்பு பல்வேறு முறைகேடுக ளுக்கு வழிவகுக்கும். என்-கவுன் டர் சாவுகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும்.காவல் துறை, தீயணைப்புத் துறையினருக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்றார் ஜி.கே. மணி.

No comments: