Friday, April 11, 2008

இடி தாக்கி இறந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி

சென்னை, ஏப். 8: கன்னியாகு மரி மாவட்டம் திருவட்டார், குல சேகரம் பகுதிகளில் இடி தாக்கி இறந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறி வித்தார்.பேரவையில் செவ்வாய்க்கி ழமை, கேள்வி நேரம் முடிந்ததும், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ லீமா ரோஸ், இது குறித்து பேரவையின் கவனத்துக்கு கொண்டு வந்து பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டம் திரு வட்டார், குலசேகரம் பகுதியில் மார்ச் 7-ம் தேதி இடி தாக்கி யேசு தாஸ் (26), நாகேந்திரன் (40) ஆகிய இருவர் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர். உயிரி ழந்த மற்றும் காயமடைந்தவர்க ளுக்கு அரசு உரிய நிவாணம் வழங்க வேண்டும்.

முதல்வர் கருணாநிதி:

கன்னி யாகுமரி மாவட்டம் திருவட்டா ரில் கடந்த மார்ச் 7-ம் தேதி இடி மின்னலுடன் பெருமழை பெய் தது. அதில் இடி தாக்கி இருவர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயம டைந்து மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்த இருவர் குடும்பத் துக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி வழங் கப்படும். காயமடைந்து மருத்துவ மனையில் உள்ள மூன்று பேருக் கும் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேரடிப் பார்வையில் சிகிச்சை அளிக்கப்படும். அவர்களது சிகிச் சைக்கு தேவையான நிதி உதவியை அரசு வழங்கும்.

No comments: